காவேரிப்பட்டணத்தில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கூழ் வியாபாரி கொலை செய்த மனைவி, அவரது கள்ளக்காதலன் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். ...
காவேரிப்பட்டணத்தில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கூழ் வியாபாரி கொலை செய்த மனைவி, அவரது கள்ளக்காதலன் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டிணம் தேனோடை நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன் (55). கூழ் வியாபாரி. நாள்தோறும் தனது வீட்டில் கூழ் செய்து, அதை பைக் மூலம் காவேரிப்பட்டிணம் எடுத்து சென்று விற்பனை செய்து வந்தார். ராஜேந்திரனுக்கு 3 மனைவிகள் உள்ளனர். முதல் மனைவிக்கு, 2 மகன்கள் மற்றும் மகள் உள்ளார்.
2-வது மனைவிக்கு ஒரு மகன் மட்டும் உள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு 2வது மனைவியை ராஜேந்திரன் விவகாரத்து செய்து விட்டு முனியம்மாள் (30) என்பவரை 3வதாக திருமணம் செய்து கொண்டார்.நேற்று முன்தினம் அதிகாலை ராஜேந்திரன் வழக்கம்போல் கூழ் எடுத்து கொண்டு தனது பைக்கில் காவேரிப்பட்டிணம் நோக்கி சென்று கொண்டிருந்தார். வேங்கை நகர் அருகே வந்தபோது திடீரென மர்ம நபர்கள் அவரை வழிமறித்து, உருட்டுக்கட்டையால் சரமாரியாக தலையில் தாக்கி உள்ளனர்.
இதில், படுகாயமடைந்த ராஜேந்திரன் ரத்தவெள்ளத்தில் கீழே சாய்ந்தார். உடனே மர்ம ஆசாமிகள் தப்பி சென்று விட்டனர். இவரது அலறல் சத்தம்கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து ராஜேந்திரனை மீட்டு காவேரிப்பட்டிணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ராஜேந்திரன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து, காவேரிப்பட்டிணம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ராஜேந்திரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து செய்து விசாரணை நடத்தியதில், ராஜேந்திரன் 3-வது மனைவி முனியம்மாளுக்கும், இவருடைய உறவினரான குமார் என்பவருக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. குமார் கனகமுட்லு அருகே உள்ள மேலேரிகொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர். செங்கல் வியாபாரம் செய்து வருகிறார். இவர் அடிக்கடி முனியம்மாளை சந்தித்து உல்லாசமாக இருந்து வந்தார்.
இந்த கள்ளக்காதல் ராஜேந்திரனுக்கு தெரியவந்ததால், முனியம்மாளை அவர் கண்டித்தார். இதுகுறித்து முனியம்மாள், குமாரிடம் தெரிவித்தார். மேலும், 'நமது கள்ளக்காதலுக்கு எனது கணவர் இடையூறாக இருக்கிறார், அவரை தீர்த்துக்கட்டினால் தான் நாம் உல்லாசமாக இருக்க முடியும்' என்று கூறியுள்ளார்.
இதையடுத்து ராஜேந்திரனை தீர்த்தக்கட்ட முனியம்மாள் உதவியுடன், குமார் திட்டம் தீட்டினார். அதன்படி ராஜேந்திரன் தினமும் அதிகாலை கூழ் விற்பனை செய்ய காவேரிப்பட்டணம் செல்வதை அறிந்து, வழியில் அவரை தீர்த்துக்கட்ட அவர்கள் முடிவு செய்தனர். நேற்று முன்தினம் அதிகாலை குமார் தனது கூட்டாளிகளான தேனோடைநகரை சேர்ந்த பவுன்ராஜ், குட்டூர் வடிவேல், ரகு, கவட்டையன் என்கிற பார்த்திபன், கீழ்புதூர் புட்டுகரியன் என்கிற சதீஷ், மலையாண்டஅள்ளி பொன்நகர் திருப்பதி ஆகியோருடன் வேங்கைநகரில் பதுங்கி இருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த ராஜேந்திரனை அவர்கள் வழிமறித்து தாக்கி, கட்டையால் அடித்துக்கொலை செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் அங்கிருந்து தப்பியோடியது தெரிய வந்தது. இதையடுத்து முனியம்மாள், கள்ளக்காதலன் குமார், இவரது கூட்டாளிகள் பவுன்ராஜ், திருப்பதி, ரகு, கவட்டையன் என்கிற பார்த்திபன் ஆகிய 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் வடிவேல், புட்டுகரியன் என்கிற சதீஷ் ஆகிய 2 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கொலை செய்த வழக்கில் மனைவி உள்பட 6 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் காவேரிப்பட்டணத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
No comments