Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் திருட்டு – போலீசார் விசாரணை

மணவாளக்குறிச்சி பகுதிக்குட்பட்ட பெரியவிளை ஊரை சேர்ந்தவர் அந்தோணி பிச்சை. இவருடைய மகன் பெலிங்டன் நாயகன் (வயது 29), மீனவ தொழில் செய்து வருகிறா...

மணவாளக்குறிச்சி பகுதிக்குட்பட்ட பெரியவிளை ஊரை சேர்ந்தவர் அந்தோணி பிச்சை. இவருடைய மகன் பெலிங்டன் நாயகன் (வயது 29), மீனவ தொழில் செய்து வருகிறார்.
இவருடைய நண்பர் அதே ஊரை சேர்ந்த வின்சென்ட். இவர்கள் இருவரும் சொந்தமாக வள்ளங்கள் வைத்து மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். சம்பவத்தன்று வழக்கம்போல் மீன்பிடித்து விட்டு கரைக்கு திரும்பினர்.
பின்னர், 2 வள்ளங்களையும் கடற்கரையோரம் நிறுத்தி விட்டு வீட்டுக்கு சென்றனர். மறுநாள் காலையில் மீன்பிடிக்க செல்வதற்காக கடற்கரை வந்தபோது, வள்ளங்களில் பொருத்தப்பட்டிருந்த மோட்டார்கள் மாயமாகி இருந்தது.

யாரோ மர்மநபர்கள் இரவில் 2 மோட்டர்களையும் திருடி சென்றது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெலிங்டன் நாயகன் குளச்சல் கடலோர பாதுகாப்பு குழும போலீசில் புகார் கொடுத்தார். பின்னர் இதுகுறித்து மணவாளக்குறிச்சி போலீசில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் மணவாளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து வள்ளங்களில் பொருத்தப்பட்டிருந்த மோட்டார்களை திருடிசென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்