Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

கடற்கரை

சொத்தவிளை கடற்கரை சொத்தவிளை கடற்கரை   தமிழ்நாட்டில்   கன்னியாகுமரி மாவட்டத்தில்  உள்ள சுற்றுலா தலங்களுள் ஒன்றாகும்.  நாகர்கோவிலுக்கு  ...

சொத்தவிளை கடற்கரை
சொத்தவிளை கடற்கரை தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களுள் ஒன்றாகும். நாகர்கோவிலுக்கு மிக அருகில் இக்கடற்கரை அமைந்துள்ளது. இது சுற்றுலா பயணிகளை அதிகம் கவர்ந்து வருகின்றது. அழகிய நீண்ட மணல் பரப்புடன் காட்சியளிக்கும் இக்கடற்கரையில் சிறு, சிறு குடில்கள் மூலம் தமிழக சுற்றுலாத்துறை அழகுப்படுத்தியுள்ளது. காட்சிக்கோபுரம், அழகிய புல் வெளிகள், சிறுவர் பூங்காக்கள் இக்கடற்கரையின் அருகில் அமைந்துள்ளன.
முட்டம் கடற்கரை
குமரியில் இருந்து 40 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ள கடற்கரை கிராமம் முட்டம். இங்கு ஒரு கலங்கரை விளக்கமும் அமைந்துள்ளது. கன்னியாகுமரியில் இருந்தும் நாகர்கோவிலில் இருந்தும் அடிக்கடி பேருந்துகள் இருக்கின்றன.

கன்னியாகுமரி கடற்கரைப் பகுதிகளில் அலையின் வேகம் இங்குதான் அதிகமாக இருக்கும். பாறைகள் நிறைந்து காணப்படும் இந்தக் கடற்கரைக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். முட்டம் ஒரு அழகிய கடற்கரை கிராமம். மீன்பிடிப்பு தொழிலை மையமாகக் கொண்ட இந்தக் கிராமத்தின் அழகியலை பல தமிழ் திரைப்படங்கள் படம்பிடித்திருக்கின்றன. அழகிய நில அமைப்பைக்கொண்டது முட்டம். பாறைகள் நிறைந்த கடற்கரையும் மேடு பள்ளமான நிலப்பரப்பும் வடமேற்கில் செம்மண் அகளிகளுமாக முட்டத்தின் இயற்கை எழிலுக்கு அளவேயில்லை.
கிட்டத்தட்ட நூறு வருடங்களுக்கு முன் கட்டப்பட்ட சகல புனிதர் கத்தோலிக்க ஆலயம் ஒன்றும் இங்குள்ளது. பழமையான கலங்கரை விளக்கம் ஒன்றும் இங்குள்ளது.
தேங்காய்ப்பட்டணம் கடற்கரை
தேங்காய்ப்பட்டணம் கடற்கரை தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களுள் ஒன்றாகும். அரபிக்கடலில் அமைந்துள்ள இக் கடற்கரை முழுவதும் தென்னை மரங்களால் சூழ்ந்துள்ளது இதன் சிறப்பம்சமாகும். இந்த கடற்கரையில் தான் தாமிரபரணி ஆறு கடலில் கலக்கின்றது. இதை தேங்காய்ப்பட்டணம் காயல் என்றும் அழைப்பர்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்