Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

தொழில் வணிகம்

தொழில் வணிகம் குமரி மாவட்டம் இயற்கை வளம் செறிந்தது. இந்த வளம் இன்னும் பயன்படுத்தப்படாமலேயே இருக்கிறது. வேளாண்மை பொருள் உற்பத்தி தொழில்கள...

தொழில் வணிகம்
குமரி மாவட்டம் இயற்கை வளம் செறிந்தது. இந்த வளம் இன்னும் பயன்படுத்தப்படாமலேயே இருக்கிறது. வேளாண்மை பொருள் உற்பத்தி தொழில்களே இங்கு பாரம்பரியமாக செய்யப்பட்டு வருகின்றன. தேசிய தொழில் வளர்ச்சிக் கழகம் இம்மாவட்டத்தில் தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புள்ளவை என கணித்திருக்கும் தொழில்கள்: அலுமினியப் பொருட்கள், மீன் பிடிக்கும் எந்திரப் படகுகள், பிளாஸ்டர் ஆப் பாரிஸ் தயாரித்தல், ரப்பர் ஷஂட், போம் ரப்பர், லெடக்ஸ் சிமெண்ட், நார்க் கயிறு, ரொட்டி, பிஸ்கட் செய்தல், மீன் பதப்படுத்துதல். தொழில் முனைவோர் இவற்றில் இறங்கலாம்.

கயிற்றுத் தொழில்: 
தென்னையின் ஓலை, நார் ஆகியவற்றிலிருந்து கயிறு முறுக்கும் தொழில் இம்மாவட்டம் முழுவதும் காணப்படுகிறது. கொல்லங்கோடு, வைகாலூர், தேங்காய்ப்பட்டினம், பூந்துறை, குளச்சல், மணவாளக்குறிச்சி, பழைய கடை, ஈத்தாம்பொழி, மணக்குடி, மண்டைக்காடு, இராஜாக்கமங்கலம் முதலிய இடங்களில் இத்தொழில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

பனைத் தொழில்:
வாழை மரம், தென்னை மரம் போல பனை மரத்தின் ஒவ்வொரு பொருளும் தமிழகத்தில் பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. பிரஷ்கள் செய்வதற்கு பனந்தும்பு வெளிநாட்டில் தேவை இருப்பதால் விளவங்கோடு, கல்குளம் வட்டங்களிலிருந்து பெருமளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதன் துணைத் தொழில்களாக பனந்தும்பு செய்வது, பனைவெல்லம் காய்ச்சுவது, பனை ஓலைக் கூடைகள் முடைவது, விசிறி, முறம் தயாரிப்பும், பனம்-நுங்கு, கிழங்கு, காய், சர்பத், பதநீர் தயாரிப்பதும் தொழில்களாக விரிவடைந்துள்ளன.

எண்ணெய் தொழில்:
தென்னை மிகுந்திருப்பதால் எண்ணெய் ஆட்டும் தொழில் வளர்ந்துள்ளன. புல் தைலம் நறுமணப் பொருட்களில் சேர்க்கவும், மருந்துகள் செய்யவும் பயன்படுகிறது. பல வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

உப்பளங்கள்:
உப்பு உற்பத்தி இம்மாவட்டத்தின் கடல்தொழிலில் முக்கியமானது. ஏறத்தாழ 6000 தொழிலாளர் இதில் ஈடுபட்டுள்ளனர். கேரளத்தின் தேவையை இம்மாவட்டம் நிறைவு செய்கிறது. புத்தளம், பால்குளம், கோவளம் தட்டாரிருப்பு, தாமரைக்குளம், குளச்சல் முதலிய ஊர்களில் இத்தொழில் சிறந்து விளங்குகிறது.
மீன்பிடிப்பு:
இம்மாவட்டத்தில் நடைபெறும் பெருந்தொழில்களில் மீன்பிடிதொழில் முக்கியமானது. 40 கடற்கரை கிராமங்களைச் சேர்ந்த ஒன்றரை லட்சம் மக்கள் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். 1500க்கும் மேற்பட்ட படகுகளும், 5000 மேற்பட்ட கட்டுமரங்களும் கொண்டு மீன்பிடி தொழில் நடைபெறுகிறது. மீன்பிடிதொழில் முக்கிய ஊர்களாக கன்னியாகுமரி, குளச்சல் பகுதிகள் விளங்குகின்றன. இம்மாவட்டத்தில் பிடிக்கப்படும் மீனின் அளவு ஏறத்தாழ 21,500 மெட்ரிக் டன்கள் ஆகும்.

மீன் பண்ணை:
தமிழக அரசின் முயற்சியால் மணக்குடி காயலில் 350 ஏக்கர் பரப்பில் ஒரு மீன் பண்ணை நடந்து வருகிறது. கன்னியாகுமரியில் கடல் மீன் ஆராய்ச்சி நிலையம் பல வகை ஆய்வுகளை நடத்தி வருகிறது. சங்கு குளிக்கும் தொழிலும், மீன் எண்ணெய் எடுக்கும் சிறுதொழில் நிலையமும் செயல்பட்டு வருகின்றன. இனையம் என்னும் கிராமத்தில் மீனுலர்த்தும் கூடம் கட்டப்பட்டு, கருவாடுகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

திருவாங்கூர் மினரல்ஸ் லிமிடெட்:
இம்மாவட்டத்தில் அரசு நடத்தும் மிகப்பெரிய தொழில் இதுவாகும். இத்தொழிற்சாலை மணவாளக்குறிச்சியில் அமைந்துள்ளது. அணு ஆராய்ச்சி துறையின் ஆளுகையின் கீழ் நடைபெறுகிறது. இதில் தமிழக அரசுக்கு 5 விழுக்காடு பங்கு உள்ளது. இங்கு எடுக்கப்படும் மண்ணில் இல்மனைட்டும், மோனசைட்டும் அணு ஆய்வுக்குப் பயன்படுவதால் மும்பையிலுள்ள டிராம்பேக்கு அனுப்பப்படுகின்றன. இதனால் இந்நிறுவனத்துக்கு பல கோடி ரூபாய் அந்நியச் செலாவணி கிடைக்கிறது.

தொழில் வளர்ச்சிக் கழகம் (டிட்கோ):
இதுவரை டிட்கோ நிறுவனம் 45 தொழிற்பிரிவுகளைத் தோற்றுவித்துள்ளது. அதில் 10 தொழிற்பிரிவுகள் பொதுத்துறையின் கீழும், மீதமுள்ள 35 தொழிற்பிரிவுகள் கூட்டுத் துறையின் கீழும் நிறுவப்பட்டுள்ளன.

கைத்தறித் தொழில்:
குமரி மாவட்டத்தில் 2 இலட்சம் பேர் இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். 30 தறிகள் செயல்பட்டு வருகின்றன. கோட்டாறு, வடசேரி, இரணியல், மார்த்தாண்டம் முதலிய ஊர்கள் துணி நெசவுக்கு பேர் பெற்றவை. வடசேரியில் சாலியர்களும், கோட்டாற்றில் பட்டுநூல்காரரும் இத்தொழிலில் சிறந்துள்ளனர். திருப்பூருக்கு பிறகு குமரி மாவட்டமே கதர் உற்பத்தியில் சிறப்பிடம் பெறுகிறது. மீன்பிடி வலைகள்கூட கதர் நூலால் தயாரிக்கப்படுகின்றன. கையால் நுற்ற நுலைக் கொண்டு கதர் தேங்காய்ப்பூத் துண்டுகள் இம்மாவட்டத்தில் மட்டுமே தயாரிக்கப்படுகின்றன. 

கூட்டுறவு நுற்பு ஆலை:
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரல்வாய்மொழியில் கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு நுற்பு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்தத் துறையில் 24,960 கதிர்களும், 3588 முறுக்கு நூல் கதிர்களும், 960 கோன் வைண்டிங் உருளைகளும் உள்ளன. 20,40,60 எண்ணிக்கை கொண்ட நூல்கள் இங்கு தயாராகின்றன. ஆண்டொன்றுக்கு ரூ.6 கோடி விற்பனையாகிறது. இது தவிர இம்மாவட்டத்தில் "நாகம்மாள் பஞ்சாலை" என்பதும் செயல்பட்டு வருகிறது.

ஓடு செய்தல்: 
கொட்டாரத்திலும், செட்டிக்குளத்திலும் ஓடு செய்யும் தொழில்சாலைகள் உள்ளன. 

தேனீ வளர்ப்பு:
மார்த்தாண்டத்தில் தேனி வளர்ப்போர் கூட்டுறவு சங்கம் 1937 இல் தோற்றம் கொண்டது. சுமார் 80,000 பங்கு மூலதனத்துடன் தொடங்கி 1000 உறுப்பினர்களை தன்னகத்தே கொண்டது. தேனிக் குடும்ப எண்ணிக்கை 85,000 ஆகும். தேன் மெழுகு தயாரிப்பது இச்சங்கத்தின் துணைத் தொழிலாகும்.

பால் உற்பத்தி:
1949 முதல் செயல்பட்டு வருகிறது. நாளொன்றுக்கு 4,41,725 லிட்டர் கொள்முதல் செய்யப்படுகிறது. பால் உற்பத்தியாளர் சங்கங்களால் 8000 குடும்பத்தினர் பயனடைகின்றனர். 'கன்னியா மில்க்' பாலுக்கு கேரளாவில் நல்ல வரவேற்பு இருக்கிறது.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்