Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாணவர் பலி

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியபட்டணம் கிறிஸ்துராஜா தெருவை சேர்ந்தவர் ஜேம்ஸ். இவருடைய மகன் நிகிலன் (வயது 15). இவர் அதே பகுதியில் உள்ள தனியார...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியபட்டணம் கிறிஸ்துராஜா தெருவை சேர்ந்தவர் ஜேம்ஸ். இவருடைய மகன் நிகிலன் (வயது 15). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
நேற்று (07-08-2022) விடுமுறை நாள் என்பதால் நிகிலன், அந்த பகுதியை சேர்ந்த ஜெனிஷ் (14), பெனோ (14), ரஜித் (14) மற்றும் ஸ்பைலன் (14) ஆகியோருடன் சேர்ந்து மணவாளக்குறிச்சி ஐ.ஆர்.இ. குடியிருப்பு பகுதிக்கு சென்று விளையாடினார். அப்போது அங்குள்ள மதில் சுவர் மீது ஏறி ஜெனிஷ், ரஜித் மற்றும் ஸ்பைலன் ஆகியோர் குதித்தனர். அதே போல் நிகிலன் மற்றும் பெனோவும் மதில் சுவர் மீது ஏறி குதிக்க முயன்றனர்.
அப்போது அங்கு சென்ற உயரழுத்த மின் கம்பி நிகிலன் மீது பட்டு, மின்சாரம் தாக்கியது. இதனால் அவர் தூக்கி வீசப்பட்டார். சத்தம் கேட்டு அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த முரளி ஓடி வந்து பார்த்தார். அப்போது நிகிலனை மின்சாரம் தாக்கியது தெரிய வந்தது. உடனே முதலுதவி சிகிச்சை அளித்து, ஆம்புலன்ஸ் மூலம் நிகிலனை ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு நிகிலனை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார். இதுபற்றி ஐ.ஆர்.இ. பாதுகாவலர் முரளி மணவாளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்