Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

மணவாளக்குறிச்சியில் பஸ் மோதி மீன் வியாபாரி படுகாயம்

மணவாளக்குறிச்சி ஆறான்விளையை சேர்ந்தவர் ஜாண் செல்வம் (வயது 47). மீன் வியாபாரம் செய்து வருகிறார். இவர் நேற்று (23-04-2022) காலை மீன் வாங்குவதற...

மணவாளக்குறிச்சி ஆறான்விளையை சேர்ந்தவர் ஜாண் செல்வம் (வயது 47). மீன் வியாபாரம் செய்து வருகிறார்.
இவர் நேற்று (23-04-2022) காலை மீன் வாங்குவதற்கு குளச்சல் மீன்பிடித் துறைமுகத்திற்கு தனது மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அங்கு மீன் கிடைக்காததால் அவர் திரும்பி மணவாளக்-குறிச்சி நோக்கி வந்தார்.
பிள்ளையார்கோவில் சந்திப்பில் செல்லும் போது எதிரே வந்த அரசு பஸ் சேரமங்கலம் சாலையில் திரும்பும்போது எதிர்பாராமல் ஜாண் செல்வம் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் படுகாயமடைந்த ஜாண் செல்வத்தை அப்பகுதியினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து மணவாளக்குறிச்சி போலீசார் அரசு பஸ் டிரைவர் ஆழ்வார் கோவில் பகுதியை சேர்ந்த சிவதாஸ் (வயது 42) மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்