Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

தீராத கடன் தொல்லை: உணவில் விஷம் கலந்து தற்கொலை செய்து கொண்ட புதுமணத்தம்பதி

கடன் தொல்லை காரணத்தால் புதுமண தம்பதி உணவில் விஷம் வைத்து சாப்பிட்டு தற்கொலை செய்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூர...

கடன் தொல்லை காரணத்தால் புதுமண தம்பதி உணவில் விஷம் வைத்து சாப்பிட்டு தற்கொலை செய்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள மைசூர், உதயகிரி சாத்தஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 26). இவரின் மனைவி பவ்யா (வயது 22). தம்பதிகள் இருவருக்கும் கடந்த வருடத்தில் திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. சந்தோஷ் வீட்டருகே மளிகை கடையை நடத்தி வந்துள்ளார். கொரோனா ஊரடங்கின் போது சந்தோஷுக்கு வியாபாரத்தில் நஷ்டம் ஏற்படவே, தனக்கு தெரிந்தவர்களிடம் அவர் பல இலட்சம் கடன் வாங்கி இருக்கிறார். 
ஆனால், வியாபாரம் முன்னேற்றத்தை தரவில்லை என்பதால், கடனை அடைக்க வழி தெரியாமல் அவதிப்பட்டுள்ளார். கடனை கொடுத்தவர்கள் பணத்தை திருப்ப கேட்டு வீட்டிற்கு வந்து தொல்லை கொடுக்க தொடங்கவே, தம்பதிகள் இருவரும் மிகுந்த மனவருத்தத்தில் இருந்துள்ளனர். ஒருகட்டத்தில் நாம் தற்கொலை செய்து உயிரை மாய்த்துவிடலாம் என்ற எண்ணத்திற்கு தம்பதிகள் சென்றுள்ளனர்.
நேற்று முன்தினம் இரவு நேரத்தில் உணவில் விஷம் கலந்த தம்பதி, அதனை சாப்பிட்டு தற்கொலை செய்துள்ளனர். நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் வீட்டின் கதவுகள் திறக்கப்படாமல் இருந்ததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், தம்பதியின் வீட்டு கதவை தட்டி பார்த்தும் திறக்கவில்லை. பின்னர், ஜன்னல் வழியாக எட்டி பார்க்கையில், தம்பதி உணவு சாப்பிட்ட நிலையில் வாயில் நுரைதள்ளி பிணமாக கிடந்துள்ளனர்.
இதனைக்கண்டு ஆதரிச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உதயகிரி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள், வீட்டின் கதவை உடைத்து தம்பதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், தம்பதி கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொண்டது உறுதியானது. இதுகுறித்த தொடர் விசாரணை நடந்து வருகிறது.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்