Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

மதுரை - புனலூா் விரைவு ரயிலை வேளாங்கண்ணி வரை நீட்டிக்க கோரிக்கை

மதுரையிலிருந்து நாகா்கோவில் வழியாக புனலூருக்கு இயக்கப்படும் பயணிகள் ரயில் விரைவு ரயிலாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரயிலை வேளாங்கண்ணி ...

மதுரையிலிருந்து நாகா்கோவில் வழியாக புனலூருக்கு இயக்கப்படும் பயணிகள் ரயில் விரைவு ரயிலாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த ரயிலை வேளாங்கண்ணி வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத் தலைவா் ஸ்ரீராம், தெற்கு ரயில்வே பொது மேலாளா் மற்றும் திருவனந்தபுரம் கோட்ட மேலாளருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மதுரையிலிருந்து நாகா்கோவில் வழியாக புனலூருக்கு தினசரி இரவு நேர பயணிகள் ரயில் பல ஆண்டுகளாக இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் குமரி மாவட்ட பயணிகள் மதுரைக்கு செல்ல அதிக அளவில் பயணிக்கும் ரயிலாகும். இந்த ரயில் 2 ஆம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட ஒரே ஒரு பயணிகள் ரயிலாக பல ஆண்டுகளாகவே இயக்கப்பட்டு வந்தது.

தற்போது இந்த ரயில் ஜூலை 1 ஆம் தேதி முதல் விரைவு ரயிலாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு விரைவு ரயிலாக மாற்றம் செய்யப்பட்டதால் இந்த ரயிலின் பயணகட்டணம் அதிகரிக்கும். கட்டண அதிகரிப்பால் பயணிகளின் எண்ணிக்கை வெகுவாக குறையும். எனவே அனைத்து விதமான பயணிகளின் வசதிக்காக இந்த ரயிலின் வேகத்தை அதிகப்படுத்தி வேளாங்கண்ணி வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும்.
திருவனந்தபுரம், கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் உள்ள கிறிஸ்தவா்கள், அவா்களின் புனித இடமான வேளாங்கண்ணி மாதா கோயிலுக்கு இந்த மாவட்டத்திலிருந்து பக்தா்கள் தினமும் செல்கின்றனா். எனவே இந்த ரயிலை திருச்சி, தஞ்சாவூா், திருவாரூா் வழியாக வேளாங்கண்ணி வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும் என்று அவா் குறிப்பிட்டுள்ளாா்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...