Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

யோகி ஆதித்யநாத் அரசில் சிறுபான்மையினர் நலத் துறை இணையமைச்சராக டேனிஷ் ஆசாத் அன்சாரி

உத்தர பிரதேசத்தில் அமைந்துள்ள பா.ஜ., அரசில், முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த டேனிஷ் ஆசாத் அன்சாரி, சிறுபான்மையினர் நலத் துறை இணையமைச்சராக நியமிக்க...

உத்தர பிரதேசத்தில் அமைந்துள்ள பா.ஜ., அரசில், முஸ்லிம் மதத்தைச் சேர்ந்த டேனிஷ் ஆசாத் அன்சாரி, சிறுபான்மையினர் நலத் துறை இணையமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சமீபத்தில் நடந்த ஐந்து மாநில சட்டசபை தேர்தல்களில், உத்தர பிரதேசத்தில் மீண்டும் பா.ஜ., அரசு அமைந்துள்ளது. முதல்வராக யோகி ஆதித்யநாத் தொடர்ந்து இரண்டாவது முறையாக பதவியேற்றார். அவருடன், 52 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.
இவர்களில் ஒரே முஸ்லிம் அமைச்சராக, டேனிஷ் அன்சாரி, 32, நியமிக்கப்பட்டுள்ளார். சட்டசபை மற்றும் சட்ட மேலவை உறுப்பினராக இல்லாத நிலையில், இவர் சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:-

இந்த நியமனம் மதத்துக்கு அப்பாற்பட்டது. அடிமட்ட தொண்டனின் உழைப்புக்கு கிடைத்து உள்ள அங்கீகாரம் இது. இதற்காக பா.ஜ., தலைமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இது, மத அடிப்படையில் அரசியல் செய்யும் சமாஜ்வாதி, காங்கிரஸ் தலைவர்களின் முகத்தில் விடுக்கப்பட்ட அறையாகும். பா.ஜ., எந்த திட்டத்தையும் ஜாதி, மதத்தின் அடிப்படையில் பிரித்து செயல்படுத்துவதில்லை.
அனைத்து தரப்பு மக்களுக்கும் நன்மை கிடைக்கும் வகையிலான திட்டங்களையே பா.ஜ., செயல்படுத்தி வருகிறது. முஸ்லிம்களுக்கு பா.ஜ., மீதான நம்பிக்கை அதிகரித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...