Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

முழு ஊரடங்கு : தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை

தமிழகத்தில் நிலவும் கொரோனா சூழலை கருத்தில் கொண்டு, சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு விசாரணை நடத்தியது. அப்போது தமிழக அரசுக்கு சி...

தமிழகத்தில் நிலவும் கொரோனா சூழலை கருத்தில் கொண்டு, சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு விசாரணை நடத்தியது.
அப்போது தமிழக அரசுக்கு சில பரிந்துரைகளை அளித்த சென்னை உயர்நீதிமன்றம், ஏற்கெனவே வாக்கு எண்ணிக்கை நாளான மே 2-ம் தேதி முழு ஊரடங்கு இருப்பதாகவும், வாக்கு எண்ணிக்கைக்கு முந்தைய நாளான மே ஒன்றாம் தேதியும் முழு ஊரடங்கை அறிவிக்கலாம் என்றும் கூறியது.
மே ஒன்றாம் தேதி அமலாகும் முழு ஊரடங்கு குறித்து ஏப்ரல் 28-ம் தேதியே அறிவிக்கலாம் என்றும், வாக்கு எண்ணிக்கை நாளில் வாக்கு எண்ணிக்கை தொடர்பான வாகனங்களை மட்டும் அனுமதிக்கலாம் எனவும் அரசுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியது.
மருந்து, தடுப்பூசி மருந்தை கூடுதலாக விநியோகிக்க அரசு பரிசீலிக்க வேண்டும் எனக்கூறிய உயர்நீதிமன்றம் தமிழகம், புதுச்சேரியின் நிலவரங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாகவும், ரெம்டெசிவிர் மருந்து கள்ளச்சந்தையில் விற்கப்படுவதை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியது.
இது தொடர்பான வழக்கு விசாரணை மே 6-ம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...