Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக போராடிய மூதாட்டி பல்கீஸ் தாதிக்கு காயிதே மில்லத் விருது

காயிதே மில்லத் கல்வி, சமூக அறக்கட்டளை சார்பில் அரசியல் நேர்மைக்கான 2020-ம் ஆண்டின்காயிதே மில்லத் விருது, சமூகஆர்வலர் ஹர்ஷ் மாந்தர் தலைமையிலா...

காயிதே மில்லத் கல்வி, சமூக அறக்கட்டளை சார்பில் அரசியல் நேர்மைக்கான 2020-ம் ஆண்டின்காயிதே மில்லத் விருது, சமூகஆர்வலர் ஹர்ஷ் மாந்தர் தலைமையிலான 'கார்வானே மொஹப்பத்' (அன்புக்கான வாகனம்) என்ற அமைப்புக்கும், குடியுரிமை சட்டத்துக்கு எதிராக டெல்லி ஷாகீன்பாக் போராட்டத்தில் பங்கேற்ற பல்கீஸ் தாதி என்ற மூதாட்டிக்கும் வழங்க முடிவு செய்யப்பட்டிருந்தது. கொரோனா காரணமாக விருது வழங்க முடியவில்லை.
விருது பெறும் இருவரும் டெல்லியில் இருப்பதால் டிச.16-ல்தேதி டெல்லியில் இந்தியன் இஸ்லாமிய கலாச்சார மையத்தில் நடைபெற்ற விழாவில் கார்வானேமொஹப்பத் அமைப்புக்கும், பல்கீஸ் தாதிக்கும் காயிதேமில்லத் விருது வழங்கப்பட்டது. 
விருதுக்கான தேர்வு கமிட்டி தலைவரும், சென்னை எஸ்ஐஇடி குழுமத் தலைவருமான மூசா ரசா, 'இந்து' என்.ராம், கல்வியாளர் வசந்திதேவி ஆகியோர் இணையம் வழியாக வாழ்த்துரை வழங்கினர். 'மஜ்லிசே முஷாவரத்' அமைப்பின் தலைவர் நவேத் ஹாமித் அவர்களுக்கு விருது பட்டயமும், ரூ.2.50 லட்சத்துக்கான காசோலையையும் வழங்கினார். 
காயிதே மில்லத்தின் கொள்ளுப் பேத்தியும், அறக்கட்டளை உறுப்பினருமான நஜ்லா ஹமீதா இணையம் மூலம் சிறப்புரை நிகழ்த்தினார். இத்தகவலை காயிதே மில்லத் கல்வி, சமூக அறக்கட்டளைபொதுச்செயலாளர் தாவூத் மியாகான் தெரிவித்துள்ளார்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...