Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

10 மாதங்களில் இல்லாத உயர்வில் பங்கு சந்தைகள்

தொடர்ந்து, 5வது நாளாக, இந்திய பங்குச் சந்தைகள் உயர்வை சந்தித்து வருகின்றன. கடந்த, 10 மாதங்களில் இல்லாத உயர்வை சந்தைகள் நேற்று சந்தித்தன. ரில...

தொடர்ந்து, 5வது நாளாக, இந்திய பங்குச் சந்தைகள் உயர்வை சந்தித்து வருகின்றன. கடந்த, 10 மாதங்களில் இல்லாத உயர்வை சந்தைகள் நேற்று சந்தித்தன.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், எச்.டி.எப்.சி., நிறுவன பங்குகள் விலை உயர்ந்தது, இதற்கு சாதகமாக அமைந்தது.மும்பை பங்குச் சந்தையின் குறியீடான, சென்செக்ஸ், 552.90 புள்ளிகள் அதிகரித்து, 41893.06 புள்ளிகளாக உயர்ந்தது. இது, 1.34 சதவீத உயர்வாகும். 
இதேபோல், தேசிய பங்குச் சந்தையின் நிப்டியும், 143.25 புள்ளிகள் அதிகரித்து, வர்த்தகத்தின் இறுதியில், 12263.55 புள்ளிகளில் நிலைபெற்றது.நேற்றைய வர்த்தகத்தில், மும்பை பங்குச் சந்தையின், சென்செக்ஸ் பிரிவில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன பங்குகள் அதிக உயர்வை சந்தித்தன. 
இப்பங்கின் விலை, 3 சதவீதம் அளவுக்கு அதிகரித்தது. இதனையடுத்து, பஜாஜ் பின்சர்வ், இண்டஸ்இண்ட் பேங்க், எச்.டி.எப்.சி., கோட்டக் வங்கி ஆகியவற்றின் விலைகளும் அதிகரித்தன. 
மாறாக, மாருதி, பார்தி ஏர்டெல், ஏஷியன் பெயின்ட்ஸ், அல்ட்ராடெக் சிமென்ட், நெஸ்ட்லே இந்தியா ஆகிய நிறுவன பங்குகள் விலை, சரிவைக் கண்டன.அமெரிக்காவில், ஜனநாயகக் கட்சி வெற்றியை எட்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளதால், வளரும் நாடுகளில் உள்ள சந்தைகள், ஏற்றம் கண்டன. இந்தியாவிலும் அது பிரதிபலித்தது.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...