Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

தேங்காப்பட்டணம் அருகே படகில் மீன்பிடிக்க சென்ற மீனவர் திடீர் மரணம்

இரவிபுத்தன்துறை மீனவ கிராமத்தை சேர்ந்த பெபியான்ஸ் (வயது 52), மீனவர். இவரும் அதே பகுதியை சேர்ந்த சபிரீஸ்கான், ரூபின், லூஜின் ஆகியோரும் தேங்கா...

இரவிபுத்தன்துறை மீனவ கிராமத்தை சேர்ந்த பெபியான்ஸ் (வயது 52), மீனவர். இவரும் அதே பகுதியை சேர்ந்த சபிரீஸ்கான், ரூபின், லூஜின் ஆகியோரும் தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று முன்தினம் இரவு கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.
படகு கரையில் இருந்து கடலுக்குள் சிறிது தூரம் சென்றபோது பெபியான்ஸ் திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. உடனே சக மீனவர்கள் அவருடன் கரை திரும்பினர். பின்னர், பெபியான்சை நித்திரவிளை பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து சிகிச்சை அளித்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நேரத்தில் மயங்கி விழுந்து மீனவர் பலியான சம்பவம் உறவினர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்