Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

சுடுகாட்டில் கிடந்த பச்சிளம் குழந்தை மீட்பு: வீசியது யார்? தீவிர விசாரணை

மதுராந்தகம் சுடுகாட்டில் பிறந்து சில நாட்களே ஆன பளச்சிளம் பெண் குழந்தையை போலீசார் மீட்டனர். அதனை வீசி சென்றது யார் என தீவிரமாக விசாரிக்கின்ற...

மதுராந்தகம் சுடுகாட்டில் பிறந்து சில நாட்களே ஆன பளச்சிளம் பெண் குழந்தையை போலீசார் மீட்டனர். அதனை வீசி சென்றது யார் என தீவிரமாக விசாரிக்கின்றனர்.
மதுராந்தகம் செங்குந்தர்பேட்டை சுடுகாடு பகுதியில் நேற்று முன்தினம் மாலை, குழந்தையின் அழுகுரல் கேட்டது. இதனால், திடுக்கிட்ட அப்பகுதி மக்கள், அங்கு சென்று பார்த்தனர். அப்போது, பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். 
அந்த குழந்தையை பாதுகாப்பான நிலையில் படுக்க வைக்கப்பட்டு இருந்தது. தகவலறிந்து மதுராந்தகம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, குழந்தையை மீட்டு மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 
மிகவும் சோர்வுடன் காணப்பட்ட குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள், நல்ல நிலையில் இருப்பதாக தெரிவித்தனர். அந்த குழந்தையை அரசு காப்பகத்தில் ஒப்படைக்க உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். 
மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த குழந்தையை வீசி சென்றது யார், தவறான முறையில் பிறந்ததா, பெண் குழந்தை என்பதால் வீசி சென்றார்களா, குழந்தை கடத்தி வரப்பட்டதா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரிக்கின்றனர். இச்சம்பவத்தால் மதுராந்தகம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...