Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

பிரசவத்திற்கு காரில் சென்றப்போது துயரம்.. கர்ப்பிணி உள்பட 7 பேர் பலியான சோகம்.!

கர்நாடகாவின் கலாபுராகி அருகே வசிக்கும் குடும்பத்தில் இர்பானா பேகம் என்பவர் கர்ப்பமாக இருந்தார். இந்நிலையில் இவரை பிரசவத்திற்காக அவரது குடும்...

கர்நாடகாவின் கலாபுராகி அருகே வசிக்கும் குடும்பத்தில் இர்பானா பேகம் என்பவர் கர்ப்பமாக இருந்தார்.
இந்நிலையில் இவரை பிரசவத்திற்காக அவரது குடும்பத்தினர் காரில் கலாபுராகியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். 
அவர்கள் சென்ற கார் சவலகி கிராமம் அருகே சாலை விபத்தில் சிக்கியது. அதாவது அவர்கள் பயணித்த கார் சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது மோதியதில் கார் உருண்டு கவிழ்ந்தது.
இந்த விபத்தில் காரில் பயணித்த 7 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர். கர்ப்பிணி பெண்ணான இர்பானா பேகம் மற்றும் உறவினர்கள் ரூபியா பேகம், அபேதாபி, ஜெயச்சுனாபி, முனீர், முகமது அலி, சௌகத் அலி என அடையாளம் காணப்பட்டுள்ளனர். 
இறந்தவர்கள் அனைவரும் ஆலண்ட் நகரத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், கர்ப்பிணிப் பெண்ணை பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்க கலபுராகிக்கு வந்து கொண்டிருந்ததாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
பிரசவத்திற்காக மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் விபத்துக்குள்ளாகி 7 பேர் இறந்த சம்பவம் கர்நாடகா மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...