குளச்சல் கடல் பகுதியில் 300க்கும் மேற்படட விசைப்படகுகளும், 1000 க்கும் மேற்படட பைபர் வள்ளங்களும் மீன்பிடி தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது...
குளச்சல் கடல் பகுதியில் 300க்கும் மேற்படட விசைப்படகுகளும், 1000 க்கும் மேற்படட பைபர் வள்ளங்களும் மீன்பிடி தொழிலில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது.
குளச்சல் பகுதியில் கடந்த 5 நாள்களாக கனமழை பொழிந்து வந்து நிலையில், வள்ளங்கள் மற்றும் கட்டுமரங்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்று கரை திரும்பிய விசைப்படகுகளும் கடந்த 5 நாட்களாக மீன்பிடிக்க செல்லவில்லை. விசைப்படகுகள் குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.
இந்நிலையில் நேற்று மழை குமரி மாவட்டத்தில் ஓய்ந்ததை தொடர்ந்து, விசைப்படகு, கட்டுமரங்கள் மற்றும் பைபர் வள்ளங்களில் மீனவர்கள் மீண்டும் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.
இந்நிலையில் இன்று மீன்பிடிக்க சென்று கரைக்கு திரும்பிய கட்டுமரங்களில் குறைவான மீன்களே கிடைத்தன. இதனால் வியாபாரிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
No comments