Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

திருமணமான 9 மாதத்தில் புதுமணப்பெண் அடித்துக் கொலை!

குடும்பத் தகராறு காரணமாக திருமணமான 9 மாதத்தில் புதுமணப்பெண் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் ம...

குடும்பத் தகராறு காரணமாக திருமணமான 9 மாதத்தில் புதுமணப்பெண் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த பத்தலப்பள்ளி கிராமத்தை சேர்ந்த கட்டிட தொழிலாளியான யுவராஜூக்கும் (22), அவரது முறைப்பெண் சுப்புலட்சுமிக்கும் (19) 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
யுவராஜூக்கு குடிப்பழக்கம் இருந்ததால் திருமணம் ஆனதில் இருந்தே இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், இரண்டு தினங்களுக்கு முன்பு வேலைக்கு சென்ற யுவராஜ் மாலை குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அதை தட்டிக்கேட்ட சுப்புலட்சுமிக்கும் அவருக்கும் சண்டை ஏற்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த யுவராஜ், இரும்பு ஊதுகுழலை எடுத்து சுப்புலட்சுமியின் தலை, நெற்றியில் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம், பக்கத்தினர் உடனடியாக மீட்டு, பேரணாம்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி சுப்புலட்சுமி உயிரிழந்தார். இதுகுறித்து சுப்புலட்சுமியின் தந்தை ராமமூர்த்தி, போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் குமார் வழக்கு பதிவு செய்து யுவராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். இறந்த சுப்புலட்சுமிக்கு திருமணமாகி 9 மாதங்களே ஆவதால் இதுதொடர்பாக ஆர்.டி.ஓ பார்த்திபன் விசாரணை நடத்த உள்ளார்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...