Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

மகள்களை சீவி சிங்காரித்து செல்ஃபி எடுத்து பின்னர் கொலை செய்த தந்தை!

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே சேதுபாவாசத்திரம் இரண்டாம் புளிக்காட்டை சேர்ந்தவர் கதிரவன் என்பவர் வேன் டிரைவராக பணியாற்றி வந்தார். இவரு...

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே சேதுபாவாசத்திரம் இரண்டாம் புளிக்காட்டை சேர்ந்தவர் கதிரவன் என்பவர் வேன் டிரைவராக பணியாற்றி வந்தார். இவருக்கு சுகன்யா என்ற பெண்ணுடன் 8 வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றது. ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக சுகன்யா தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். 7 மற்றும் 5 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
பொதுமுடக்கம் காரணமாக வருமானம் இல்லாததால் கதிரவன் தனது இரண்டு மகள்களையும் வைத்துக் கொண்டு மிகவும் கஷ்டப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 4ஆம் தேதி கதிரவன் தனது இரண்டு மகள்களையும் குளிப்பாட்டி விட்டு, பட்டு சட்டை மற்றும் பட்டு பாவாடை உடுத்திவிட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் சாமி கும்பிட்டுவிட்டு தனது மகள்களுடன் செல்பி எடுத்து அதை தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

அதன்பிறகு கதிரவன் கடைக்கு சென்று சிக்கன் குஸ்கா வாங்கி அதில் விஷத்தைக் கலந்து தனது இரண்டு மகளுக்கும் கொடுத்து விட்டு அவரும் சாப்பிட்டார்.
மயங்கிக் கிடந்த மூன்று பேரையும் அக்கம் பக்கத்தினர் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். எனினும் சிகிச்சை பலனளிக்காமல் இரண்டு குழந்தைகளும் உயிரிழந்தனர்.
கதிரவன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். கதிரவனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்தது என்றும் அதன் காரணமாகத்தான் அவரது மனைவி அவரிடம் கோபித்துக் கொண்டு தனது அம்மா வீட்டுக்கு சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...