Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

ஈத்தாமொழி அருகே பைக்குகள் மோதி விபத்து: கல்லூரி மாணவர்கள் 2 பேர் பலி

ஈத்தாமொழி அருகே தர்மபுரத்தைச் சேர்ந்தவர் தங்கராஜா மணி. இவர் கூட்டுறவு துறையில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவரது மகன் தேவஅரசு (வயது 20). இ...

ஈத்தாமொழி அருகே தர்மபுரத்தைச் சேர்ந்தவர் தங்கராஜா மணி. இவர் கூட்டுறவு துறையில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவரது மகன் தேவஅரசு (வயது 20). இவர் கோவையில் உள்ள கேட்டரிங்கல்லூரியில் படித்து வந்தார்.
ராஜாக்கமங்கலம் துறையை சேர்ந்தவர் லிஜோஸ் (20). இவர் சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் கடலாராய்ச்சி படித்து வருகிறார். தற்போது விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். தேவ அரசு இன்று (20-02-2022) கோவையில் உள்ள கல்லூரிக்கு செல்வதற்கு தயார் ஆனார்.

இதேபோல் லிஜோசும் இன்று சென்னைக்கு செல்ல முடிவு செய்தார். இதையடுத்து நண்பர்கள் இருவரும் சந்தித்து பேசினார்கள். பின்னர் நேற்று இரவு இருவரும் தனித்தனி மோட்டார் சைக்கிளில் ஈத்தாமொழியில் இருந்து நாகர்கோவில் நோக்கி செல்லும் சாலையில் சென்றனர்.
பெரியவிளை பகுதியில் சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த வாகனம் ஒன்று தேவஅரசு, லிஜோஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

தேவ அரசு ரோட்டோரத்தில் இருந்த மின் கம்பம் மீது விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

லிஜோஸ் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். விபத்து பற்றி தகவல் அறிந்ததும் ஈத்தாமொழி போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
பலியான தேவஅரசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். லிஜோஸ் உடலும் பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. நண்பர்கள் இருவரும் அடுத்தடுத்து விபத்தில் சிக்கி பலியான சம்பவம் அவர்களது உறவினர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விபத்து குறித்து ஈத்தாமொழி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

விபத்தில் சிக்கிய 2 கல்லூரி மாணவர்கள் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் எது? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு உள்ளனர். விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிள் மீது மற்றொரு வாகனத்தில் உள்ள பெயிண்டுகளும் இருந்தது தெரியவந்துள்ளது.

போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...