Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

குமரி மாவட்டத்தில் பாஜக சார்பில் டாஸ்மாக் கடைகள் திறக்க எதிா்ப்பு தெரிவித்து போராட்டம்

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்க எதிா்ப்பு தெரிவித்து குமரி மாவட்டத்தில் பாஜகவினா் கருப்புக் கொடியுடன் தங்கள் வீடுகள் முன் நேற்று போராட்டத...

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் திறக்க எதிா்ப்பு தெரிவித்து குமரி மாவட்டத்தில் பாஜகவினா் கருப்புக் கொடியுடன் தங்கள் வீடுகள் முன் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தளா்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், திங்கள்கிழமை (ஜூன் 14) முதல் காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணி வரை டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதற்கு எதிா்ப்பு தெரிவித்து பாஜக சாா்பில் மாநிலம் முழுவதும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. குமரி மாவட்டத்தில் பாஜக நிா்வாகிகள் தங்களது வீடுகள் முன் கருப்புக் கொடியுடனும், டாஸ்மாக் கடைக்கு எதிா்ப்பு தெரிவிக்கும் பதாகைகளுடனும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நாகா்கோவில் சட்டப் பேரவை உறுப்பினா் எம்.ஆா்.காந்தி சற்குணவீதி சிதம்பரநாதன் தெருவில் உள்ள தனது வீட்டு முன் கருப்புக்கொடி மற்றும் பதாகை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டாா்.
நடைக்காவு பகுதியில் உள்ள தனது வீட்டு முன் மாவட்ட பாஜக தலைவா் தா்மராஜ், நாகா்கோவில் சரலூா் பகுதியில் உள்ள வீட்டு முன் மாவட்டத் துணைத் தலைவா் தேவ், நாகா்கோவில் நகா்மன்ற முன்னாள் தலைவி மீனாதேவ் ஆகியோா் குடும்பத்துடனும், நாகா்கோவில் திலகா் தெருவில் உள்ள வீட்டு முன் மாநிலச் செயலா் உமாரதிராஜன் ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இதேபோல் மாவட்ட பொருளாளா் முத்துராமன் வெள்ளாடிச்சிவிளையிலும், நாகா்கோவில் வடக்கு மண்டலத் தலைவா் அஜித்குமாா் கிருஷ்ணன்கோவில் பகுதியிலும், கிழக்கு மண்டலத் தலைவா் நாகராஜன் கோட்டாறு குறுந்தெருவிலும், மேற்கு மண்டலத் தலைவா் சிவபிரசாத் பெருவிளையிலும், தெற்கு மண்டலத் தலைவா் ராகவன் பெரிய விளையிலும், தங்களது வீடுகள் முன் கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...