Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

குமரி மாவட்டத்தில் 18 தேர்வு மையங்களில் குரூப்-1 முதனிலைத் தேர்வு: கலெக்டர் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டத்தில் குரூப்-1 முதனிலைத் தேர்வு 18 தேர்வு மையங்களில் நடந்தது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வழி நடத்தப்படும் குரூ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் குரூப்-1 முதனிலைத் தேர்வு 18 தேர்வு மையங்களில் நடந்தது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வழி நடத்தப்படும் குரூப் 1 முதனிலைத் தேர்வு கன்னியாகுமரி மாவட்டத்தில் 18 தேர்வு மையங்களில் நடந்தது.
மாவட்டத்தில் இந்த தேர்வை மொத்தம் 5440 விண்ணப்பதாரர்கள் எழுத இருந்தனர். 18 தேர்வு மையங்களுக்கும் முதன்மை கண்காணிப்பாளர்கள் மற்றும் அறை கண்காணிப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு கண்காணித்தனர். இதற்காக 4 நடமாடும் குழுக்கள் மற்றும் 2 பறக்கும் படைகள் நியமிக்கப்பட்டு இருந்தது. 
18 தேர்வு மையங்களிலும் முறைகேடுகள் நடைபெறா வண்ணம் தடுக்க போலீசார் நிறுத்தப்பட்டு இருந்தனர். ஒவ்வொரு தேர்வு மையத்திற்கும் ஒரு ஆய்வு அலுவலர் வீதம் 18 ஆய்வு அலுவலர்கள் செயல்பட்டனர். 
மாவட்ட கலெக்டர் அரவிந்த் குரூப் 1 முதனிலைத் தேர்வு நடந்த 18 மையங்களில் புனித சிலுவை கல்லூரி, இந்து கல்லூரி, பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி, ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி ஆகிய மையங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்