Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

நித்திரவிளை அருகே ஆட்டோ டிரைவர் தற்கொலை

வீட்டில் தகராறில் ஈடுபட்ட ஆட்டோ டிரைவர் உடலில் டீசல் ஊற்றி தற்கொலை. இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: நித்திரவிளை அருகே கும்பனாழி...

வீட்டில் தகராறில் ஈடுபட்ட ஆட்டோ டிரைவர் உடலில் டீசல் ஊற்றி தற்கொலை. இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
நித்திரவிளை அருகே கும்பனாழி பண்டாரவிளை வீடு பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (49) ஆட்டோ டிரைவர். இவருக்கு திருமணமாகி மனைவி, ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் பிள்ளைகள் உள்ளனர். 
பிள்ளைகள் இருவருக்கும் திருமணமாகி விட்ட நிலையில் சுரேஷ்குமார் மதுபழக்கத்திற்கு ஆளாகி வீட்டில் வந்து தகராறு செய்வது வழக்கம். இதன் காரணமாக கடந்த ஒரு வருடங்களுக்கு முன் அவரது மனைவி சிந்து (45) பிரிந்து சென்றுள்ளார். 

இதனால் மனமுடைந்து காணப்பட்ட இவர் கடந்த டிசம்பர் 30 ம் தேதி மது குடித்துவிட்டு வீட்டிற்கு அவர் வீட்டில் வயதான தாய் தந்தையர் மற்றும் மகனுடன் தகராறில் ஈடுபட்டு விட்டு திடீரென ஆட்டோவில் வைத்திருந்த டீசலை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். 
உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கிருந்து அவரை தீவிர சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுப்பி வைத்துள்ளனர் அங்கு சிகிட்சை பெற்று வந்த அவர் நேற்று அதிகாலை சிகிட்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். 
இது சம்பந்தமாக அவரது மகன் அகில் (26) கொடுத்த புகாரின் பேரில் நித்திரவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து உடலை பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...