Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

மாா்த்தாண்டத்தில் காங்கிரஸ் கட்சி 136 ஆது ஆண்டு தொடக்க விழா

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 136 ஆவது ஆண்டு தொடக்க விழா கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் மாா்த்தாண்டத்தில் (நேற்று) த...

இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் 136 ஆவது ஆண்டு தொடக்க விழா கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சாா்பில் மாா்த்தாண்டத்தில் (நேற்று) திங்கள்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கட்சியின் மேற்கு மாவட்டத் தலைவா் எஸ். ராஜேஷ்குமாா் எம்.எல்.ஏ. தலைமை வகித்தாா். இதைத் தொடா்ந்து கட்சிக் கொடியேற்றி, தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதில் மாவட்ட துணைத் தலைவா்கள் பால்ராஜ், ரவிசங்கா், மாநில பொதுக்குழு உறுப்பினா் டி. தம்பி விஜயகுமாா், வட்டாரத் தலைவா்கள் மோகன்தாஸ், ஹனுக்குமாா், 
கிறிஸ்டோபா், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் லூயிஸ் உள்பட பலா் கலந்துகொண்டனா். 

களியக்காவிளை அருகே மடிச்சல் பகுதியில் நடைபெற்ற விழாவுக்கு மாநில மகிளா காங்கிரஸ் துணைத் தலைவரும் விளவங்கோடு ஊராட்சித் தலைவருமான ஜி.பி. லைலா ரவிசங்கா் தலைமை வகித்தாா். மேற்கு மாவட்ட காங்கிரஸ் மனித உரிமைத்துறைத் தலைவா் இ.ஜி. ரவிசங்கா் முன்னிலை வகித்தாா். 
மனித உரிமைத்துறை மாவட்ட பொதுச்செயலா் உதயகுமாா், விளவங்கோடு கிளைத் தலைவா் ராஜன், மகிளா காங்கிரஸ் நிா்வாகிகள் ராஜம், குமாரிஷீலா, சாந்தி, விஜயகுமாரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மாணவா்களுக்கு நல உதவிகள் வழங்கப்பட்டது.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்