Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

இத்தாலி கடற்படையினரால் சுடப்பட்ட மீனவர்கள் குடும்பத்தினருக்கு சர்வதேச தீர்ப்பாய உத்தரவுப்படி நிவாரணம் வழங்க வேண்டும்: கலெக்டர் அலுவலகத்தில் மனு

தெற்காசிய மீனவர் தோழமை பொதுச்செயலாளர் சர்ச்சில் தலைமையில் ஏராளமான மீனவர்கள் நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு ஒன்றை...

தெற்காசிய மீனவர் தோழமை பொதுச்செயலாளர் சர்ச்சில் தலைமையில் ஏராளமான மீனவர்கள் நேற்று நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
குமரி மாவட்டம் இரையுமன்துறை மற்றும் பூத்துறை பகுதியை சேர்ந்த மீனவர்கள் கடந்த 2012-ம் ஆண்டு கேரள பகுதியில் கடலில் விசைப்படகில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். 
அப்போது, அந்த வழியாக சென்ற இத்தாலி கடற்படையினர், மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதில் 2 மீனவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுதொடர்பாக இத்தாலி கடற்படை வீரர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். 
இந்த வழக்கு ஐகோர்ட்டில் இருந்து சர்வதேச தீர்ப்பாயத்துக்கு மாற்றப்பட்டது. அப்போது பலியான மீனவர்களுக்கும், பாதிக்கப்பட்ட சக மீனவர்களுக்கும் இந்திய அரசு, இத்தாலியிடம் இருந்து உரிய நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டது. 
இந்நிலையில் துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்ட சக மீனவர்களுக்கு கேரள மற்றும் தமிழக அரசுகள் எந்தவித நிவாரணமும் வழங்கவில்லை. எனவே சர்வதேச தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி, துப்பாக்கிச்சூட்டின்போது பாதிக்கப்பட்ட சக மீனவர்களுக்கும் நிவாரணத்தை இந்திய அரசு உடனே பெற்று தரவேண்டும். 

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...