Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

தக்கலை அருகே பைக் விபத்து - புது மாப்பிள்ளை உயிரிழப்பு

இரணியல் அருகே நெய்யூர் ஆத்திவிளை பகுதியை சேர்ந்தவர் பிரவீன் உதயகுமார் (வயது 33). இவர், நெய்யூர் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி எதிரே பழக்...

இரணியல் அருகே நெய்யூர் ஆத்திவிளை பகுதியை சேர்ந்தவர் பிரவீன் உதயகுமார் (வயது 33). இவர், நெய்யூர் பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி எதிரே பழக்கடை நடத்தி வந்தார். இவருக்கு திருமணம் நடந்து 4 மாதங்களே ஆகிறது.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் வேர்கிளம்பி பகுதியில் நடந்த நண்பரின் திருமண நிகழ்ச்சிக்கு பிரவீன் உதயகுமார் சென்றார். 

திருமண நிகழ்ச்சி முடிந்ததும் அவர், கன்னியாகுமரி சர்ச்ரோடு பகுதியை சேர்ந்த நண்பர் கெவின் (35) என்பவரின் மோட்டார் சைக்கிளின் பின்னால் உட்கார்ந்து வீட்டுக்கு புறப்பட்டார். தக்கலை அருகே மேக்காமண்டபம்-அழகியமண்டபம் சாலையில் பிலாங்காலை சர்ச் பகுதியில் மோட்டார் சைக்கிள் சென்று கொண்டு இருந்த போது நாய் ஒன்று குறுக்கே பாய்ந்தது. 
இதனால் கெவின் நிலைதடுமாறினார். அப்போது மோட்டார் சைக்கிள் கீழே விழுந்தது. இதில் கெவின், பிரவீன் உதயகுமார் ஆகியோர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். 
உடனே அக்கம்-பக்கத்தினர் இருவரையும் மீட்டு தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் நேற்றுகாலை பிரவீன் உதயகுமார் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தகவல் அறிந்ததும், தக்கலை போலீசார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 
திருமணம் நடந்த 4 மாதத்திலேயே புது மாப்பிள்ளை விபத்தில் இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...