Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

ஈத்தாமொழியில் பிராந்தி வாங்க 10 ரூபாய் கேட்ட தொழிலாளி அடித்துக்கொலை: வாலிபர் கைது

ஈத்தாமொழியில் பிராந்தி வாங்க தன்னிடம் 10 ரூபாய் கெட்ட தொழிலாளியை வாலிபர் தாக்கியதில், அவர் பரிதாபமாக இறந்தார். கேரள மாநிலம் பூந்துறை கிராமத்...

ஈத்தாமொழியில் பிராந்தி வாங்க தன்னிடம் 10 ரூபாய் கெட்ட தொழிலாளியை வாலிபர் தாக்கியதில், அவர் பரிதாபமாக இறந்தார்.
கேரள மாநிலம் பூந்துறை கிராமத்தை சேர்ந்தவர் அந்தோணி அடிமை (வயது 55). கூலி தொழிலாளி. இவருக்கு மலர் என்ற மனைவியும், இரு மகள்களும் உள்ளனர். மலரின் சொந்த ஊர் ஈத்தாமொழி அருகே உள்ள பொழிக்கரை பகுதியாகும்.
அந்தோணி அடிமை தனது மனனவி மற்றும் குடும்பத்தினருடன் பொழிக்கரையில் வசித்து வந்தார். தற்போது குடும்ப தகராறு காரணமாக மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார். 

கூலி வேலைக்கு சென்று கிடைக்கும், பணத்தில் மதுவாங்கி அருந்திவிட்டு ரோட்டோரங்களில் படுத்து உறங்குவார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு, ஈத்தாமொழி அத்திக்கடையில் உள்ள டாஸ்மாக் கடைக்கு அந்தோணி அடிமை மதுவாங்க சென்றார். 
அப்போது அவரிடம் 10 ரூபாய் குறைவாக இருந்தது. அந்த சமயத்தில் அங்கு வந்த ராஜாக்கமங்கலம் சட்டுவன்தோப்பு பகுதியை சேர்ந்த சிவா அர்ஜூன் ரவி (வயது 29) என்பவரிடம் 10 ரூபாய் கேட்டார். அப்போது சிவா, நானே பெரிய ரவுடி என்னிடமே பணம் கேட்கிறாயா? என கேட்டு தகராறு செய்தார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. 

அப்போது சிவா, அந்தோணி அடிமையை தாக்கி கீழே தள்ளினார். இதில் அவர் மயங்கினார். உடனே அந்தோணி அடிமையை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினர். 
இந்த சம்பவம் தொடர்பாக ஈத்தாமொழி போலீசார் சிசாரனை நடத்தி சிவா மீது, கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த அந்தோணி அடிமை நேற்று இரவு இறந்தார். 

இதையடுத்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது. அந்தோணி அடிமை உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...