Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

குளச்சலில் போக்குவரத்து விதிகளை மீறிய 106 பேர் மீது வழக்கு: சட்டையில் பொருத்திய கேமராவுடன் போலீசார் வாகன சோதனை

கொரோனா பரவல் காரணமாக போக்குவரத்து விதிகளை மீறும் நபர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காமல் இருந்தனர். இந்தநிலையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட...

கொரோனா பரவல் காரணமாக போக்குவரத்து விதிகளை மீறும் நபர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்காமல் இருந்தனர். இந்தநிலையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் வாகன சோதனையை தீவிரப்படுத்த குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் உத்தரவிட்டார்.
அதன்பேரில் குளச்சல் சப்-டிவிஷனில் உதவி போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஸ் சாஸ்திரியின் மேற்பார்வையில் குளச்சல் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையில் போலீசார் நேற்று காலை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். 
அப்போது, மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல், லைசென்ஸ் இல்லாமல், காரில் சீட் பெல்ட் அணியாமல் என போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்களை ஓட்டி வந்த 106 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்தனர். 
வாகன சோதனையின் போது போலீசாருக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இதனை தவிர்க்க நவீன கேமரா போலீசாருக்கு வழங்கப்பட்டது. அதன்படி குளச்சலில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் சட்டையில் நவீன கேமராவை பொருத்தி இருந்தார். 
வாகன சோதனையின் போது வாகன ஓட்டிகள் போலீசாரிடம் வாக்குவாதம் செய்து விட்டு பிரச்சினையை திசை திருப்புவதால், நடக்கும் சம்பவங்களை அப்படியே படம் பிடித்து வைத்துக்கொள்ள இந்த கேமரா உதவியாக இருக்கும். இந்த வாகன சோதனை நேற்று இரவு வரை நீடித்தது. இதேபோல் தக்கலை, நாகர்கோவில், கன்னியாகுமரி என அனைத்து போக்குவரத்து போலீசாருக்கும் சட்டையில் பொருத்தும் கேமரா வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த கேமராக்களை வாகன சோதனையின் போது போலீசார் பயன்படுத்தி வருகிறார்கள்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...