Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

சாலையில் அனாதையாக கிடந்த குழந்தை மீட்பு: பெற்றோர் குறித்து போலீசார் விசாரணை

கோபிசெட்டிப்பாளையம் அரசு மாணவியர் விடுதி முன்பு சாலையில் அனாதையாக கிடந்த பிறந்து இரண்டு நாட்களே ஆன ஆண் குழந்தையை பொதுமக்கள் மீட்டு கோபி அர...

கோபிசெட்டிப்பாளையம் அரசு மாணவியர் விடுதி முன்பு சாலையில் அனாதையாக கிடந்த பிறந்து இரண்டு நாட்களே ஆன ஆண் குழந்தையை பொதுமக்கள் மீட்டு கோபி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த குழந்தையின் பெற்றோர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் அருகே உள்ள நாகர்பாளையம் சாலையில் அரசு மாணவியர் விடுதி உள்ளது. இந்த விடுதியில் இருந்த மாணவிகள் அனைவரும் கொரோனா தொற்று காரணமாக வீட்டிற்கு அனுப்பப்பட்ட நிலையில், கடந்த 45 நாட்களாக விடுதி பூட்டப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு விடுதி முன்பு குழந்தை அழும் சத்தம் கேட்டது.
இதை கேட்ட நல்ல கவுண்டன்பாளையத்தை சேர்ந்த பிரசாந்த் என்பவர் அங்கு சென்ற போது, சாலையில் அழகான ஆண் குழந்தை இருப்பதை கண்டார். இதனை தொடர்ந்து அப்பகுதி மக்களுடன் சேர்ந்த குழந்தையை மீட்டு கோபி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார்.
மருத்துவமனையில் குழந்தையை பரிசோதித்த போது பிறந்து இரண்டு நாட்கள் ஆனது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து மருத்துவர்கள் பச்சிளம் குழந்தைகள் வார்டில் வைத்து குழந்தையை பராமரித்து வருகின்றனர். குழந்தையின் பெற்றோர் யார்? என்பது குறித்து கோபி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விரைவில் குழந்தையின் தாயை கண்டுபிடித்து குழந்தை ஒப்படைக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...