Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

நாகர்கோவிலில் விபத்தில் காயமடைந்த கணவர் சாவு: நர்சுக்கு தீவிர சிகிச்சை

நாகர்கோவிலில் விபத்தில் காயமடைந்த கணவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். அவருடைய மனைவி நர்சுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறத...

நாகர்கோவிலில் விபத்தில் காயமடைந்த கணவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். அவருடைய மனைவி நர்சுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
நாகர்கோவில் சுங்கான்கடை அம்மன் கோவில் வடக்கு தெருவை சேர்ந்தவர் வேணு செல்வம் (வயது 31), லாரி டிரைவர். இவருடைய மனைவி சுபா ஆனந்தி (20), ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வேணு செல்வம் ஆஸ்பத்திரியில் இருந்து தன் மனைவியை அழைத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்றார்.
பார்வதிபுரம் கட்டையன்விளை பகுதியில் சென்ற போது எதிரே வந்த ஒரு லாரி எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இந்த விபத்தில் கணவன்-மனைவி இருவரும் ரோட்டில் தூக்கி வீசப்பட்டனர். அவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி மக்கள் உடனே 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். எனினும் சிகிச்சை பலனளிக்காமல் வேணு செல்வம் பரிதாபமாக இறந்தார். இதை தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பிணவறைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
சுபா ஆனந்திக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். லாரி-மோட்டார் மோதிய விபத்தில் டிரைவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...