Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

கருங்கல் அருகே இறைச்சி கழிவுகள் ஏற்றிவந்த வாகனத்தின் கண்ணாடி உடைப்பு

கருங்கல் அருகேயுள்ள பாலூா் பகுதியில் இறைச்சி கழிவுகள் ஏற்றிவந்த வாகனத்தின் கண்ணாடியை அப்பகுதியினா் உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கேரள...

கருங்கல் அருகேயுள்ள பாலூா் பகுதியில் இறைச்சி கழிவுகள் ஏற்றிவந்த வாகனத்தின் கண்ணாடியை அப்பகுதியினா் உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கேரள மாநிலத்திலிருந்து நேற்று ஒரு டெம்போ துா்நாற்றத்துடன் இறைச்சி கழிவுகளை ஏற்றி வந்துகொண்டிருந்தது. தகவலறிந்த கருங்கல் போலீஸாா் விரைந்து சென்று பாலூா் பகுதியில் டெம்போவை நிறுத்தினா்.
அதை ஓட்டிவந்த திருவனந்தபுரத்தைச் சோ்ந்த ரதீஸிடம் (37) போலீஸாா் விசாரணை நடத்தியதில், இறைச்சி கழிவுகளை அஞ்சுகிராமத்தில் உள்ள ஒரு தொழிற்சாலைக்கு கொண்டுசெல்வதாக தெரிவித்தாா்.

இதையடுத்து, இறைச்சி கழிவுகளை பாலூா் குளத்தின் கரையில் குழிதோண்டி புதைக்கவேண்டும் என போலீஸாா் கூறினா். ஆனால், அவ்வாறு புதைத்தால், தங்கள் பகுதியில் சுகாதார சீா்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் பரவும் எனக் கூறி, அப்பகுதி மக்கள் எதிா்ப்பு தெரிவித்து, கழிவுகளை திருப்பி அனுப்புமாறு வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
அப்போது, சில மா்ம நபா்கள் டெம்போவின் கண்ணாடியை கல்வீசி உடைத்தனா். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, போலீஸாா் டெம்போவை பறிமுதல் செய்து அதன் ஓட்டுநரை கைது செய்தனா்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்