கருங்கல் அருகே உள்ள தெருவுக்கடை பகுதியை சேர்ந்தவர் அபி (வயது 20). இவர் இன்று காலை தனது சகோதரி வெர்ஜின் பெர்னலெட் (வயது 25) என்பவருடன் தேசி...
கருங்கல் அருகே உள்ள தெருவுக்கடை பகுதியை சேர்ந்தவர் அபி (வயது 20). இவர் இன்று காலை தனது சகோதரி வெர்ஜின் பெர்னலெட் (வயது 25) என்பவருடன் தேசிய நெடுஞ்சாலை வழியாக ஸ்கூட்டரில் சென்றுள்ளார்.

இதில் தூக்கிவீசப்பட்ட அபி மற்றும் வெர்ஜின் பெர்னலெட் இருவரும் படுகாயம் அடைந்தனர். இதில் வெர்ஜின் பெர்னலெட் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அபியை அருகில் இருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து குறித்து தகவல் அறிந்த மார்த்தாண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். வெர்ஜின் பெர்னலெட் உடலை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் தனியார் பஸ் டிரைவர் கக்கோடு பகுதியை சேர்ந்த ஐயப்பன் (வயது 55) என்பவரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வெர்ஜின் பெர்னலெட் பி.எட் முடித்து ஃபேஷன் டெக்னாலஜி படிக்க முயற்சி மேற்கொண்டு வந்துள்ளார். இந்நிலையில் அவர் விபத்தில் உயிரிழந்தது அப்பகுதியினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
No comments