மணவாளக்குறிச்சி அருகே உள்ள அம்மாண்டிவிளை திவண்டாகோட்டை பகுதியை சேர்ந்தவர் மேரி எமிலிபாய் (வயது 48). இவரது மகன் சுபின்குமார் (வயது 22). ...
மணவாளக்குறிச்சி அருகே உள்ள அம்மாண்டிவிளை திவண்டாகோட்டை பகுதியை சேர்ந்தவர் மேரி எமிலிபாய் (வயது 48). இவரது மகன் சுபின்குமார் (வயது 22).

இவர் நேற்று மதியம் வில்லுக்குறியில் இருந்து கண்டன்விளைக்கு பைக்கில் வந்துகொண்டிருந்தார். கண்டன்விளை ரெயில்வேகேட் அருகே வரும்போது, எதிரே வந்த கார் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
கீழே விழுந்த சுபின்குமார் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகில் உள்ளவர்கள் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு சுபின்குமார் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
















No comments