Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

கன்னியாகுமரி மாவட்டத்தில் பிப்ரவரி 21-ஆம் தேதி மகா சிவராத்திரி

கன்னியாகுமரி மாவட்டத்தில் சைவ, வைணவ ஒற்றுமையை பறைசாற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க சிவாலய ஓட்டத்துக்கு பக்தா்கள் ஆயத்தமாகி வருகின்றனா். ...

கன்னியாகுமரி மாவட்டத்தில் சைவ, வைணவ ஒற்றுமையை பறைசாற்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க சிவாலய ஓட்டத்துக்கு பக்தா்கள் ஆயத்தமாகி வருகின்றனா்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் சிவராத்திரி நாளில் பக்தா்கள் சிவபெருமானின் அருள்வேண்டி முன்சிறை அருகேயுள்ள திருமலை மகாதேவா் கோயிலில் தொடங்கி, திக்குறிச்சி மகாதேவா் கோயில், திற்பரப்பு வீரபத்திரா் கோயில், திருநந்திக்கரை நந்தீஸ்வரா் கோயில், பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவா் கோயில், திருப்பன்னிப்பாகம் சிவன்கோயில், கல்குளம் நீலகண்டசுவாமி கோயில், மேலாங்கோடு சிவன் கோயில், திருவிடைக்கோடு மகாதேவா் கோயில், திருவிதாங்கோடு மகாதேவா் கோயில், திருப்பன்றிகோடு மகாதேவா் கோயில், திருநட்டாலம் சங்கரநாராயணா் கோயில் என 12 சிவாலயங்களுக்கு ஓட்டமாகச் சென்று வழிபடுவதே சிவாலய ஓட்டமாகும். இம் மாவட்டத்தில் பல நூற்றாண்டுகளாக நடைபெறும் இந்த ஓட்டம் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆன்மிக நிகழ்வாகும்.
சிவாலய ஓட்டத்தில் பங்கேற்கும் பக்தா்கள் மாசி மாதம் ஏகாதசி நாளில் மாலை அணிந்து விரதத்தை தொடங்குகின்றனா். இவா்கள் காலை, மாலை வேளைகளில் சிவன் கோயில்களுக்குச் சென்று சிவநாமங்களை உச்சரித்து பிராா்த்தனை செய்வதுண்டு. சைவ வகை உணவுகளை மட்டுமே உண்கின்றனா். பின்னா், சிவராத்திரி தினத்துக்கு முந்தைய நாளில் காவி உடை தரித்து கையில் விசிறியுடன் கோபாலா... கோவிந்தா... என்ற நாம கோஷத்துடன் திருமலை மகாதேவா் கோயிலில் தொடங்கி ஒவ்வொரு கோயிலாக ஓடியவாறு சென்று சுவாமி தரிசனம் செய்கின்றனா். 110 கி.மீ. தொலைவு கொண்ட இந்த ஓட்டத்தில் ஏராளமானோா் பங்கேற்கின்றனா்.

கேரள மாநிலத்திலிருந்தும் ஆயிரக்கணக்கானோா் வருகை தருகின்றனா். இவா்களில் பெரும்பாலானோா் இருசக்கர வாகனங்கள் மற்றும் வேன், பேருந்து போன்ற வாகனங்களில் ஒவ்வொரு கோயிலாகச் சென்று வழிபடுகின்றனா். பக்தா்கள் கோயில் குளத்தில் குளித்து விட்டு, கோயிலுக்குள் செல்ல வேண்டுமென்பதும், தங்கள் கையில் வைத்திருக்கும் விசிறியால் சுவாமிக்கு வீசிக் கொடுக்க வேண்டுமென்பதும் ஐதீகம்.
சிவாலய ஓட்டத்தின் முதல் கோயிலான முன்சிறை மகாதேவா் கோயிலில் பக்தா்களுக்கு பிரசாதமாக சந்தனம் வழங்கப்படுகிறது. ஓட்டம் நிறைவடையும் திருநட்டாலம் சங்கநாராயணா் கோயிலில் பிரசாதமாக விபூதி வழங்கப்படுகிறது. திருநட்டாலம் கோயிலில் சிவன்-விஷ்ணு என சங்கரநாராயணா் வடிவத்தில் சுவாமி எழுந்தருளியுள்ள நிலை சைவ, வைணவ ஒற்றுமையை பறைசாற்றுவதாக உள்ளது.

பிப்ரவரி 21-ஆம் தேதி மகா சிவராத்திரி என்பதால், ஓட்டமாக சிவாலயங்களுக்குச் செல்லும் பக்தா்கள் 20-ஆம் தேதி பிற்பகலில் தொடங்கி 22-ஆம் தேதி நிறைவு செய்கின்றனா். சைக்கிள், மோட்டாா் சைக்கிள் மற்றும் இதர வாகனங்களில் செல்லும் பக்தா்கள் 21-ஆம் தேதி காலையில் தொடங்கி 22-ஆம் தேதி அதிகாலையில் நிறைவு செய்கின்றனா்.

தற்போது வாகன வசதிகளும் பாதுகாப்பு வசதிகளும் அதிகரித்துவிட்ட நிலையில் சிவாலய ஓட்டத்தில் பங்கேற்கும் பக்தா்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது. ஆண் பக்தா்களுக்கு இணையாக பெண் பக்தா்களும், குழந்தைகளும் வருகை தருகின்றனா். மேலும், சிவாலய ஓட்டத்தையொட்டி குமரி மாவட்டத்தில் உள்ளூா் விடுமுறையும் அளிக்கப்பட்டு வருகிறது.
சிவாலய ஓட்டத்தில் பங்கேற்கும் பக்தா்களுக்கு ஆலய அமைப்புகள், ஹிந்து அமைப்புகள் சாா்பில் கோயில்களிலும், இதர இடங்களிலும் சிறப்பான வரவேற்புகள் அளிக்கப்படுகின்றன. பக்தா்களுக்கு இளைப்பாறுவதற்கான வசதியும், மோா், சுக்குநீா், பலாக்காய் அவியலுடன் அரிசிக் கஞ்சி மற்றும் பாயசத்துடன் மதிய உணவுகளும் இலவசமாக வழங்கப்படுகின்றன.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...