Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

குளச்சலில் ரூ. 1.86 கோடியில் புதிய தீயணைப்பு நிலையம்: கட்டுமான பணிகளை டிஜிபி ஆய்வு செய்தார்

குளச்சலில் நடந்து வரும் புதிய தீயணைப்பு நிலைய கட்டுமானப் பணிகளை டிஜிபி சைலேந்திரபாபு ஆய்வு செய்தார். தமிழ்நாடு தீயணைப்புத்துறை இயக்கு...

குளச்சலில் நடந்து வரும் புதிய தீயணைப்பு நிலைய கட்டுமானப் பணிகளை டிஜிபி சைலேந்திரபாபு ஆய்வு செய்தார்.
தமிழ்நாடு தீயணைப்புத்துறை இயக்குநர் டிஜிபி சைலேந்திரபாபு நேற்று முன்தினம் குமரி மாவட்டம் வந்தார். அப்போது குளச்சல் தீயணைப்பு நிலையத்திற்கு சென்ற அவர், அங்கு 1.86 கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வரும் புதிய கட்டிட கட்டுமான பணிகளை பார்வையிட்டார்.
அப்போது தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய உதவி பொறியாளர் மோகனப்பிரியா, கட்டுமான பணிகள் குறித்து விளக்கினார். தற்போது 90 சதவீதப்பணிகள் முடிவடைந்து இருப்பதாகவும், மீதமுள்ள பணிகள் விரைவில் முடிக்கப்படும் என அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட தீயணைப்பு அலுவலர் சரவணபாபு, குளச்சல் தீயணைப்பு நிலைய அலுவலர் தேவராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்