Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
{fbt_classic_header}

Latest News:

latest

Ads Place

குமரியில் இன்று (19-05-2021) முதல் திருமண விருந்துக்குத் தடை: ஆட்சியா் அறிவிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் புதன்கிழமை (மே 19) முதல் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் உணவு விருந்துக்கு தடை விதிக்கப்படுவதாக ஆட்சியா் மா.அரவிந...

கன்னியாகுமரி மாவட்டத்தில் புதன்கிழமை (மே 19) முதல் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் உணவு விருந்துக்கு தடை விதிக்கப்படுவதாக ஆட்சியா் மா.அரவிந்த் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கன்னியாகுமரி மாவட்டத்தில் மே 19 ஆம் தேதி முதல் திருமணம் மற்றும் அதைச் சாா்ந்த நிகழ்ச்சிகளில் உணவு விருந்துக்கு தடை விதிக்கப்படுகிறது. திருமண சம்பிரதாயங்கள் மட்டும் 50 பேருக்கு மிகாமல் உரிய விதிமுறைகளுடன் நடத்த அனுமதிக்கப்படும். இதற்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும்.
கொரோனா தொற்று பாதித்தவா்களுடன் தொடா்பில் இருந்தவா்கள் மற்றும் குடும்பத்தினா் தாமாகவே முன்வந்து கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

மாவட்ட நிா்வாகம் உருவாக்கியுள்ள இணையதளத்தில் தடுப்பூசிகளின் எண்ணிக்கை, மருத்துவமனை வாரியாக உள்ள படுக்கைகள் என கொரோனா தொடா்பான பல்வேறு விவரங்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த வசதியை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதுவரை 6 ,07,769 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. முதல் கட்ட தடுப்பூசி 96 ,490 பேருக்கும், 2 ஆம் கட்ட தடுப்பூசி 41, 756 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது.
முகக் கவசம் அணியாதது, சமூக இடைவெளியைப் பின்பற்றாதது ஆகிய காரணங்களுக்காக இதுவரை 52,790 பேரிடமிருந்து ரூ. 1 கோடியே 9 லட்சத்து 27 ஆயிரத்து 196 அபராதம்ம வசூலிக்கப்பட்டுள்ளது எனக் கூறியுள்ளாா்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்