Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

நடுக்கடலில் மாயமான 11 குமரி மீனவர்கள் கோவா அருகே மீட்பு!

கோவா அருகே நடுக்கடலில் மீன்பிடித்தபோது மாயமான 11 குமரி மாவட்ட மீனவர்களும், பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கன்னியாகுமர...

கோவா அருகே நடுக்கடலில் மீன்பிடித்தபோது மாயமான 11 குமரி மாவட்ட மீனவர்களும், பத்திரமாக மீட்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் தேங்காய்பட்டினம் துறைமுகத்தில் இருந்து, வள்ளவிளை பகுதியை சேர்ந்த ஜோசப் பிராங்கிளின் உள்ளிட்ட 11 மீனவர்கள் கடந்த 9ஆம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். கடந்த 23ஆம் தேதி அன்று கோவா அருகே நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது படகு விபத்தில் சிக்கியதால், அதில் இருந்த மீனவர்களின் நிலை குறித்து அறிய முடியாத நிலை ஏற்பட்டது.
இதனை அடுத்து, மீனவர்களை கண்டுபிடித்து தரக் கோரி, அவரது உறவினர்களும், தமிழக அரசியல் தலைவர்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். தொடர்ந்து, கடலோர காவல் படையினர் மற்றும் சக மீனவர்கள் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில், மாயமானதாக கூறப்பட்ட வள்ளவிளையை சேர்ந்த 11 மீனவர்களும் பத்திரமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மாயமான படகின் உரிமையாளரான ஜோசப் பிராங்கிளின் இன்று காலை தனது குடும்பத்தினரை தொடர்பு கொண்டு இந்த தகவலை தெரிவித்துள்ளார். மேலும், தற்போது லட்சத்தீவு பகுதியில் வந்து கொண்டிருப்பதாகவும், நாளை தேஙகாய்பட்டினம் வந்தடைவோம் என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.
மீனவர்கள் மீட்கப்பட்ட தகவலை அறிந்து, அவது உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், இதுகுறித்து தகவல் அறிந்த கர்நாடக கடலோர காவல் படையினர் மீனவர்களை மீட்டு அழைத்து வந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...