Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

தென்தாமரைகுளம் பகுதியில் காதலியை திருமணம் செய்ய முடியாத ஏக்கத்தில் கட்டிட தொழிலாளி தற்கொலை

தென்தாமரைகுளத்தில் காதலியை திருமணம் செய்ய முடியாத ஏக்கத்தில் கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் கைப்பட எழுதிய உருக...

தென்தாமரைகுளத்தில் காதலியை திருமணம் செய்ய முடியாத ஏக்கத்தில் கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் கைப்பட எழுதிய உருக்கமான கடிதம் சிக்கி உள்ளது.
இந்த பரிதாப சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தென்தாமரைகுளம் சர்ச் தெருவைச் சேர்ந்தவர் பால்குடம். இவருடைய மகன் நிஷாந்த் (வயது 21). கட்டிட தொழிலாளி. இவரும், அதே பகுதியைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் காதலித்து வந்தனர்.
அந்த பெண் வேறு சமூகத்தை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது. இவர்களின் காதல் விவகாரம் தெரிந்ததால் இருவர் வீட்டிலும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனால் கடந்த சில நாட்களாக நிஷாந்த் மனமுடைந்து காணப்பட்டார்.

நேற்று முன்தினம் இரவு நிஷாந்த் தனது அறைக்கு தூங்கச் சென்றார். நேற்று காலை வெகுநேரம் ஆகியும் அறைக்கதவு திறக்கப்படவில்லை. கதவை தட்டியும் எந்த சத்தமுமில்லை. இதனால், சந்தேகமடைந்த பெற்றோர், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
அங்கு, நிஷாந்த் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அக்கம் பக்கத்தினரை அழைத்து வந்து பார்த்தபோது, நிஷாந்த் ஏற்கனவே இறந்து இருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து நிஷாந்தின் தந்தை பால்குடம் தென்தாமரைகுளம் போலீசில் புகார் செய்தார். தென்தாமரைகுளம் சப்-இன்ஸ்பெக்டர்கள் செல்வராஜன், ஜான் கென்னடி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
நிஷாந்த் தற்கொலை தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, நிஷாந்தின் அறையை சோதனை செய்தபோது, அவர் கைப்பட உருக்கமாக எழுதிய கடிதம் ஒன்று போலீசாரின் கையில் சிக்கியது. அந்த கடிதத்தில் தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்ய முடியாததால் தற்கொலை செய்து கொள்வதாகவும், தனது சாவுக்கு வேறு யாரும் காரணமில்லை என்றும் எழுதப்பட்டு இருந்தது.

இச்சம்பவம் குறித்து தென்தாமரைகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். கன்னியாகுமரி இன்ஸ்பெக்டர் சொர்ணராணி விசாரணை நடத்தி வருகிறார்.

காதலித்த பெண்ணை திருமணம் செய்ய முடியாத ஏக்கத்தில் கட்டிட தொழிலாளி தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...