குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 1000-க்கும் மேற்பட்ட கட்டுமரங்களும் மீன் பிடித்தொழில் ச...
குளச்சல் மீன்பிடி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு 300-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், 1000-க்கும் மேற்பட்ட கட்டுமரங்களும் மீன் பிடித்தொழில் செய்து வருகின்றன.

கட்டுமர மீனவர்கள் தினமும் அதிகாலையில் கடலுக்கு சென்றுவிட்டு மதியம் கரை திரும்புவது வழக்கம். அவர்களது வலையில் சிறியரக மீன்கள் உள்பட பல மீன்கள் சிக்கியிருக்கும்.
ஆனால், விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடலுக்கு சென்று 10 நாட்கள் வரை தங்கியிருந்து மீன்பிடித்து விட்டு கரை திரும்புவார்கள். இவர்களது வலையில் பல உயரக மீன்கள் பிடிக்கப்பட்டிருக்கும்.
இந்நிலையில் நேற்று கரை திரும்பிய ஒரு விசைப்படகில் ராட்சத கட்ட கொம்பன் மீன் பிடிப்பட்டு இருந்தது. அதை மீனவர்கள் துறைமுக ஏலக்கூடத்திற்கு எடுத்து சென்றனர். அந்த மீன் 225 எடை இருந்தது.
துறைமுகத்திற்கு வந்த சுற்றுலா பயணிகளும், சிறுவர்களும் ஆர்வமுடன் பார்த்தனர். தொடர்ந்து ஏலக்கூடத்தில் மீன் ஏலமிடப்பட்டது. அதை வியாபாரிகள் போட்டிபோட்டு ஏலம் எடுத்தனர். இறுதியில் அந்த மீன் ரூ.15 ஆயிரத்துக்கு விலை போனது.
No comments