Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

குமரி மாவட்டம் முழுவதும் கனமழை: நீர்மட்டம் உயர்வு

குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், பூதப்பாண்டி, கன்னியாகுமரி, ஆரல்வாய்மொழி, அஞ்சுகிராமம் உள்ளிட்ட பல பகுதிகளில் காலை முதல் கன மழை பெய்தது. கன்...

குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், பூதப்பாண்டி, கன்னியாகுமரி, ஆரல்வாய்மொழி, அஞ்சுகிராமம் உள்ளிட்ட பல பகுதிகளில் காலை முதல் கன மழை பெய்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக சாரல் மழை பெய்து வந்தது. இந்தநிலையில் வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு காரணமாக காலை முதல் மாவட்டத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
குமரி மாவட்டத்தில், நாகர்கோவில் பூதப்பாண்டி, ஆரல்வாய்மொழி, அஞ்சுகிராமம், புத்தேரி, தாழக்குடி, கொட்டாரம் போன்ற பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மலையோர பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. 
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு 1,700 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணை 40 அடியை எட்டிவிடும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

மழை அளவு விபரம்:- 
அதிகபட்சமாக மாவட்டத்தில் சுருளோடு பகுதியில் 5 சென்டி மீட்டர் மழையும், கன்னியாகுமரியில் 4 சென்டி மீட்டர் மழையும், கொட்டாரத்தில் 3.5 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. 
தொடர்ந்து மழை பெய்து வருவதால் மாவட்டம் முழுவதும் குளுகுளு சீதோஷ்ன நிலை நிலவி வருகிறது. மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் மழை வெள்ளத்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், தொடர் மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...