குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், பூதப்பாண்டி, கன்னியாகுமரி, ஆரல்வாய்மொழி, அஞ்சுகிராமம் உள்ளிட்ட பல பகுதிகளில் காலை முதல் கன மழை பெய்தது. கன்...
குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், பூதப்பாண்டி, கன்னியாகுமரி, ஆரல்வாய்மொழி, அஞ்சுகிராமம் உள்ளிட்ட பல பகுதிகளில் காலை முதல் கன மழை பெய்தது. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக சாரல் மழை பெய்து வந்தது. இந்தநிலையில் வங்கக்கடலில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு காரணமாக காலை முதல் மாவட்டத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

குமரி மாவட்டத்தில், நாகர்கோவில் பூதப்பாண்டி, ஆரல்வாய்மொழி, அஞ்சுகிராமம், புத்தேரி, தாழக்குடி, கொட்டாரம் போன்ற பெரும்பாலான பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மலையோர பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு 1,700 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணை 40 அடியை எட்டிவிடும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மழை அளவு விபரம்:-
அதிகபட்சமாக மாவட்டத்தில் சுருளோடு பகுதியில் 5 சென்டி மீட்டர் மழையும், கன்னியாகுமரியில் 4 சென்டி மீட்டர் மழையும், கொட்டாரத்தில் 3.5 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் மாவட்டம் முழுவதும் குளுகுளு சீதோஷ்ன நிலை நிலவி வருகிறது. மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக சாலைகளில் பெருக்கெடுத்து ஓடும் மழை வெள்ளத்தால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், தொடர் மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
No comments