கன்னியாகுமரி மாவட்டம் மேல்மிடாலம் பகுதியை சேர்ந்தவர் மரிய டார்வின். மீனவர். இவரது மனைவி லேன் மங்கேஷ்கா. இவர்களுக்கு திருமணமாகி 14 ஆண்டுகள்...
கன்னியாகுமரி மாவட்டம் மேல்மிடாலம் பகுதியை சேர்ந்தவர் மரிய டார்வின். மீனவர். இவரது மனைவி லேன் மங்கேஷ்கா. இவர்களுக்கு திருமணமாகி 14 ஆண்டுகள் ஆகின்றன.

மரிய டார்வின் (வயது 42), சவுதி அரேபியாவில் ஜித்தா ஓஸ்கா பகுதியில் மீன்பிடி தொழில் செய்து வந்தார்.
கடந்த 15-ம் தேதி காலையில் மீன்பிடிக்க சென்றபோது, மரிய டார்வின் கடலில் விழுந்து இறந்துவிட்டதாக, அவரது மனைவிக்கு தகவல் வந்தது. இதை கேட்டதும் அவர் அதிர்ச்சியடைந்தார்.
தற்போது மரிய டார்வின் உடலை சொந்த ஊர் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட கலெக்டருக்கு, மரிய டார்வின் மனைவி லேன் மங்கேஷ்கா கோரிக்கை மனு அளித்துள்ளார்.
No comments