Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

குளச்சல், திங்கள்நகர் பகுதிகளில் இறைச்சிக்காக ஆடு, மாடு திருடிய 3 பேர் சிக்கினர்

குமரி மாவட்டத்தில் சமீபகாலமாக இரவு நேரங்களில் வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு, மாடுகள் திருடப்படுவது தொடர்கதையாக நடந்து வருகிறது. இதையடுத...

குமரி மாவட்டத்தில் சமீபகாலமாக இரவு நேரங்களில் வீடுகளில் வளர்க்கப்படும் ஆடு, மாடுகள் திருடப்படுவது தொடர்கதையாக நடந்து வருகிறது.
இதையடுத்து மாவட்ட எஸ்பி ஸ்ரீநாத் உத்தரவின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் ஜாண் போஸ்கோ தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கி விடப்பட்டது.
இரணியல், குளச்சல், இராஜாக்கமங்கலம் காவல் நிலையம் உள்பட்ட பகுதிகளில் கடந்த ஒரு வார காலத்தில் சுமார் 15க்கும் மேற்பட்ட ஆடு, மாடுகள் திருட்டு வழக்குகள் பதிவாகி உள்ளது. இதனை தடுக்க தனிப்படையினர் தீவிர ரோந்து மேற்கொண்டனர்.

அப்போது ஆம்னி வேனில் வந்த 3 பேரிடம் சந்தேகத்தின் பேரில் விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக தகவல் கூறியதால், சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில் அவர்கள் இரவு நேரங்களில் ஆடு, மாடு திருட்டில் ஈடுபட்டது, தெரிய வந்தது. பிடிபட்ட 3 பேரும் திருவிதாங்கோடு பகுதியை சேர்ந்தவர்கள் ஆவார்கள். அவர்கள் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஆடு, மாடு திருடிய வழக்குகளில் தொடர்பு உள்ளதும், திருடப்பட்ட ஆடு, மாடுகள் இறைச்சிக்காக பயன்படுத்தி வந்ததும் தெரிய வந்தது.

அவர்களிடம் இருந்து குருந்தன்கோடு பகுதியில் திருடப்பட்ட 3 பசுக்கள், 3 ஆடுகள் மற்றும் ஆம்னி வேனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மீட்கப்பட்ட கால்நடைகளின் மதிப்பி சுமார் ரூ.3 லட்சம் ஆகும். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...