Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

தக்கலை அருகே ஸ்கூட்டரில் சென்ற பெண் வாகனம் மோதி பலி: கணவருக்கு தீவிர சிகிச்சை

தக்கலை அருகே ஸ்கூட்டரில் சென்ற பெண், அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியானார். அவரது கணவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கர...

தக்கலை அருகே ஸ்கூட்டரில் சென்ற பெண், அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியானார். அவரது கணவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கருங்கல் அருகே மாங்கரை, பொற்றவிளை பகுதியை சேர்ந்தவர் ராபி (வயது 46), விவசாயி. இவருடைய மனைவி அமலா (38). இவர்களுக்கு அசி (14) என்ற மகளும், தர்சன் (12) என்ற மகனும் உள்ளனர்.

தினமும் அமலா கணவருடன் தோட்டியோடு பகுதியில் உள்ள காய்கறி தோட்டத்துக்கு சென்று விவசாய பணிகளை கவனித்து வருவது வழக்கம்.
அதேபோல் நேற்று காலையில் கணவன்- மனைவி இருவரும் வழக்கம் போல் ஸ்கூட்டரில் தோட்டத்துக்கு புறப்பட்டனர். அவர்கள், தக்கலை அருகே கொல்லாய் பகுதியில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் திடீரென ஸ்கூட்டர் மீது மோதியது.

இதில், இருவரும் சாலையில் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் அமலா அந்த வாகனத்தின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். ராபி படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். விபத்தை ஏற்படுத்திய வாகனம் நிற்காமல் சென்று விட்டது.
இதைகண்ட அக்கம் பக்கத்தினர் உடனே, இரணியல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதற்கிடையே இதுபற்றி தகவல் அறிந்த குளச்சல் உதவி போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஸ் சாஸ்திரி, இரணியல் சப்-இன்ஸ்பெக்டர் ராபர்ட் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ராபியை மீட்டு சிகிச்சைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், விபத்து நடந்த பகுதி தக்கலை சரகத்துக்குட்பட்ட பகுதி என்பதால் தக்கலை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தக்கலை போலீஸ் துணை சூப்பிரண்டு ராமச்சந்திரன், தக்கலை இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் ஆகியோர் விரைந்து சென்று அமலாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை கண்டு பிடிக்க அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

கணவருடன் ஸ்கூட்டரில் சென்ற பெண் வாகனம் மோதி பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...