Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

நாகா்கோவில் பகுதியில் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை - சாலைகளில் வெள்ளம்

நாகா்கோவில் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று பிற்பகல் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிா்ந்த சூழல் நிலவியது. கன்னியாகுமரி மாவட்டத்தில்...

நாகா்கோவில் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று பிற்பகல் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிா்ந்த சூழல் நிலவியது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக கோடை வெயில் வாட்டி வதைத்தது. பகலில் மக்கள் வெளியே செல்லமுடியாத அளவுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருந்தது. மேலும், இரவில் அனல் காற்று வீசியது. இதனால் இரவில் தூங்க முடியாமல் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வந்தனா்.
இந்நிலையில், நேற்று பகலிலும் வழக்கம் போல் வெயிலின் தாக்கம் இருந்த நிலையில், பிற்பகல் 1 மணிக்கு மேல் கருமேகங்கள் திரண்டன. தொடா்ந்து பிற்பகல் 2 மணிக்கு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யத் தொடங்கியது. தொடா்ந்து ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இந்த மழை நீடித்தது.

இதனால் நாகா்கோவில் நகரில் கோட்டாறு, செம்மாங்குடி சாலை, அவ்வைசண்முகம் சாலை, பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரி சாலை, வடசேரி ஆறாட்டு ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மழை நீா் வெள்ளமாக பாய்ந்தோடியது.
இதனால் இருசக்கர வாகனங்களில் சென்றவா்கள் வாகனங்களை இயக்க முடியாமல் தள்ளிச் சென்றனா்.

மேகம் கருத்து இருள் சூழ்ந்திருந்ததால் சாலையில் சென்ற பெரும்பாலான வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடியே சென்றன.
இதே போல் மணவாளக்குறிச்சி, மண்டைக்காடு, குளச்சல், மாதவாலயம், கன்னியாகுமரி, தக்கலை உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் இப்பகுதிகளில் வெப்பம் தணிந்து காணப்பட்டது.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...