Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

மணவாளக்குறிச்சி சி.எஸ்.ஐ. ஆலயம் சார்பில் கிறிஸ்துமஸ் பஜனை

மணவாளக்குறிச்சி ஆண்டார்விளை பகுதியில் உள்ள சி.எஸ்.ஐ. ஆலயம் சார்பில் கிறிஸ்துமஸ் பஜனை ஊர்வலம் நடைபெற்றது. டிசம்பர் 25-ம் தேதி உலகம் முழுவதும்...

மணவாளக்குறிச்சி ஆண்டார்விளை பகுதியில் உள்ள சி.எஸ்.ஐ. ஆலயம் சார்பில் கிறிஸ்துமஸ் பஜனை ஊர்வலம் நடைபெற்றது.
டிசம்பர் 25-ம் தேதி உலகம் முழுவதும் கிறிஸ்தவ மக்களால் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. அதனை தொடர்ந்து குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து சர்சுகளும் வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. 
மணவாளக்குறிச்சி சி.எஸ்.ஐ. ஆலயம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, ஆலயத்தை சுற்றி ஸ்டார்கள் தொங்கவிடப்பட்டுள்ளது. சிறப்பு குடில் அமைக்கப்பட்டுள்ளது. தினமும் மாலையில் சிறப்பு கிறிஸ்துமஸ் பஜனை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. 
கிறிஸ்துமஸ் பஜனை ஜாதி, மத பாகுபாடின்றி அனைத்து சமுதாய மக்கள் வசிக்கும் பகுதிக்கும் சென்று வருகிறது. அதோடு கிறிஸ்துமஸ் தாத்தா மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கிறிஸ்துமஸ் மற்றும் புதுவருட வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்.
டிசம்பர் 24-ம் தேதி மாலை 6.30 மணிக்கு சிறப்பு பாடல் ஆராதனை நடைபெறுகிறது. 25-ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு கிறிஸ்து பிறப்பு சிறப்பு ஆராதனை நடைபெகிறது. 
கிறிஸ்துமஸ் தினமான டிசம்பர் 25-ம் தேதி அன்று மதியம் 2 மணிக்கு கிறிஸ்துமஸ் மர விழா நடைபெறுகிறது. 

செய்தி மற்றும் நியூஸ்
டயசன் M.A., B.Ed., M.Phil.
பாம்பே பிரிண்டர்ஸ், மணவாளக்குறிச்சி.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...