Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

காந்தி பிறந்தநாள்: கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் அபூர்வ சூரிய ஒளி

காந்தியடிகளின் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு கன்னியாகுமரி மண்டபத்தில் அமைந்துள்ள அஸ்தி கட்டடத்தில் அபூர்வ சூரிய ஒளி வெள்ளிக்கிழமை விழுந்தது...

காந்தியடிகளின் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு கன்னியாகுமரி மண்டபத்தில் அமைந்துள்ள அஸ்தி கட்டடத்தில் அபூர்வ சூரிய ஒளி வெள்ளிக்கிழமை விழுந்தது.
காந்தியடிகளின் அஸ்தி 1948-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி கன்னியாகுமரி கடலில் கரைக்கப்பட்டது. அஸ்தி கரைப்பதற்கு முன்பாக பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக கடற்கரையில் வைக்கப்பட்டது. அந்த இடத்தில் 1956-ஆம் ஆண்டு அவருக்கு நினைவு மண்டபம் கட்டப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் காந்தியடிகளின் பிறந்த நாளான அக். 2ஆம் தேதி சூரிய கதிர்கள் அங்குள்ள காந்தியின் அஸ்தி கட்டடத்தில் விழும்படி அமைக்கப்பட்டுள்ளது இம்மண்டபத்தின் சிறப்பம்சமாகும். 
நிகழாண்டு காந்தியடிகளின் ஜெயந்திவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதைமுன்னிட்டு காந்தி அஸ்தி கட்டடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அஸ்தி கட்டடம் முன்பு காந்தியடிகளின் படம் வைக்கப்பட்டிருந்தது. நண்பகல் 12 மணிக்கு அஸ்தி கட்டடத்தில் சூரிய ஒளி விழுந்தது. அப்போது அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர். காந்தி மண்டப பொறுப்பாளர் ஜலால் ரகுபதி ராகவ ராஜாராம் என்ற காந்தீய பாடலை பாடினார். 
கரோனா அச்சுறுத்தல் காரணமாக காந்தி மண்டபத்தினுள் குறைந்த அளவில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர். 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய்சுந்தரம் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். 
முன்னதாக காந்தி மண்டபம் முன்பிருந்து நாகர்கோவில் வரையிலான போதை விழிப்புணர்வு ஜோதி ஓட்டத்தை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே, தில்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...