மணவாளக்குறிச்சி அருகே உள்ள வெள்ளிச்சந்தை காட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் ராபின் ஜோஸ். இவர் தக்கலையில் இருசக்கர வாகன ஒர்க்ஷாப் மற்றும் சர்வீஸ...
மணவாளக்குறிச்சி அருகே உள்ள வெள்ளிச்சந்தை காட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் ராபின் ஜோஸ். இவர் தக்கலையில் இருசக்கர வாகன ஒர்க்ஷாப் மற்றும் சர்வீஸ் ஸ்டேஷன் நடத்தி வருகிறார்.

இவரது மனைவி, கணவருக்கு தெரியாமல் அப்பகுதியில் ஐந்தரை சென்ட் நிலம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த இடத்தில் எல்லை தகராறு இருந்து வந்ததாகவும் தெரிகிறது.
ஆனால் இதுகுறித்து ராபின்ஜோஸ் தட்டி கேட்கவில்லை எனவும் தெரிகிறது. இதனால் கணவன், மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால் இருவரும் தனித்தனியாக பிரிந்து வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், அவரது மனைவி, அவரது சகோதரர் எட்வின், சகோதரியுடன் சம்பவத்தன்று ராபின்ஜோஸ் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தகராறு செய்துள்ளார். மேலும் ஆத்திரம் அடைந்த அவர்கள் ராபின் ஜோசை சரமாரியாக அடித்து உதைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதை தடுக்க சென்ற அவரது மகனையும் தாக்கி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த இருவரையும் உறவினர்கள் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவம் குறித்த புகாரின் பேரில் வெள்ளிச்சந்தை போலீசார் ராபின்ஜோஸ் மனைவி, அவரது சகோதரி மற்றும் சகோதரர் எட்வின் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்தனர். எட்வினை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
No comments