Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

மணவாளக்குறிச்சி அருகே வாலிபருக்கு சரமாரி அடி, உதை: மனைவி உள்பட 3 பேர் மீது வழக்கு

மணவாளக்குறிச்சி அருகே உள்ள வெள்ளிச்சந்தை காட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் ராபின் ஜோஸ். இவர் தக்கலையில் இருசக்கர வாகன ஒர்க்ஷாப் மற்றும் சர்வீஸ...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள வெள்ளிச்சந்தை காட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் ராபின் ஜோஸ். இவர் தக்கலையில் இருசக்கர வாகன ஒர்க்ஷாப் மற்றும் சர்வீஸ் ஸ்டேஷன் நடத்தி வருகிறார்.
இவரது மனைவி, கணவருக்கு தெரியாமல் அப்பகுதியில் ஐந்தரை சென்ட் நிலம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த இடத்தில் எல்லை தகராறு இருந்து வந்ததாகவும் தெரிகிறது.

ஆனால் இதுகுறித்து ராபின்ஜோஸ் தட்டி கேட்கவில்லை எனவும் தெரிகிறது. இதனால் கணவன், மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால் இருவரும் தனித்தனியாக பிரிந்து வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், அவரது மனைவி, அவரது சகோதரர் எட்வின், சகோதரியுடன் சம்பவத்தன்று ராபின்ஜோஸ் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து தகராறு செய்துள்ளார். மேலும் ஆத்திரம் அடைந்த அவர்கள் ராபின் ஜோசை சரமாரியாக அடித்து உதைத்துள்ளதாக கூறப்படுகிறது.

இதை தடுக்க சென்ற அவரது மகனையும் தாக்கி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த இருவரையும் உறவினர்கள் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவம் குறித்த புகாரின் பேரில் வெள்ளிச்சந்தை போலீசார் ராபின்ஜோஸ் மனைவி, அவரது சகோதரி மற்றும் சகோதரர் எட்வின் ஆகியோர் மீது வழக்குபதிவு செய்தனர். எட்வினை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...