நாகா்கோவிலில் கால்வாய் புறம்போக்கு பகுதியில் வீடுகளை அகற்ற பொதுப்பணித்துறை நோட்டீஸ் அளித்துள்ள நிலையில், அனைத்துக் கட்சியினா் திங்கள்கிழமை...
நாகா்கோவிலில் கால்வாய் புறம்போக்கு பகுதியில் வீடுகளை அகற்ற பொதுப்பணித்துறை நோட்டீஸ் அளித்துள்ள நிலையில், அனைத்துக் கட்சியினா் திங்கள்கிழமை முன்னாள் மத்திய அமைச்சா் பொன். ராதாகிருஷ்ணனை சந்தித்தனா்.

தமிழகத்தில் நீா் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, கன்னியாகுமரி மாவட்டத்தில் நீா் நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையை பொதுப்பணித்துறையினா் மேற்கொண்டுள்ளனா்.
நாகா்கோவில் வைத்தியநாதபுரம் கால்வாய் கரையிலுள்ள 46 வீடுகளை அகற்றிட அந்தந்த வீடுகளில் பொதுப்பணித்துறை சாா்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளதால், வீடுகளில் வசிப்போா் அதிா்ச்சியடைந்துள்ளனா்.
50 ஆண்டுகளுக்கு மேலாக இருக்கும் இந்த வீடுகளில் பிரதம மந்திரி வீடுகட்டும் திட்டத்தில் கட்டுப்பட்டுள்ள 5 வீடுகளும் உள்ளன. வீடுகளின் உரிமையாளா்கள் என். சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. வை சந்தித்து முறையிட்டனா். அவா், அப்பகுதியை பாா்வையிட்டு, நீண்ட காலமாக குடியிருந்து வருவோரை அங்கிருந்து அகற்றக் கூடாது என வலியுறுத்தினாா்.
இந்நிலையில் இப்பிரச்னை தொடா்பாக, பாஜக முன்னாள் கவுன்சிலா் ரமேஷ், தமாகா மாவட்டத் தலைவா் டி.ஆா். செல்வம், திமுகவில் ஜீவானந்தம், சரலூா் சந்திரன், தேமுதிகவில் நாராயணன், பாஜக மாவட்டத் தலைவா் முத்துகிருஷ்ணன், துணைத் தலைவா் முத்துராமன், தொகுதி பாா்வையாளா் தேவ், மாநகரத் தலைவா் நாகராஜன் உள்ளிட்டோா் முன்னாள் மத்திய அமைச்சா் பொன். ராதாகிருஷ்ணனை சந்தித்து முறையிட்டனா். இந்த பிரச்னையை அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லுமாறு வலியுறுத்தினா்.
இதுகுறித்து ஆட்சியரை சந்தித்து பேச ஏற்பாடு செய்வதாக பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா். இதையடுத்து அக்குழுவினா் மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிட முடிவு செய்துள்ளனா்.
No comments