Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

திங்கள்நகர் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் தி.மு.க. நிர்வாகி மரணம்

திங்கள்நகர் அருகே வடக்கு நுள்ளிவிளையை சேர்ந்தவர் இருதயதாஸ் (வயது 59). இவருக்கு மனைவியும், 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். இருதயதாஸ் ...

திங்கள்நகர் அருகே வடக்கு நுள்ளிவிளையை சேர்ந்தவர் இருதயதாஸ் (வயது 59). இவருக்கு மனைவியும், 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர்.
இருதயதாஸ் மாவட்ட தி.மு.க. தொண்டரணி துணை அமைப்பாளராக இருந்து வந்தார். மேலும், அந்த பகுதியில் டெய்லர் கடையும் நடத்தி வந்தார்.
சம்பவத்தன்று இருதயதாஸ் மோட்டார் சைக்கிளில் இரணியலுக்கு சென்று விட்டு, மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். பேயன்குழி பகுதியில் வந்தபோது, திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி அருகில் இருந்த வீட்டின் காம்பவுண்டு சுவரில் மோதியது. இதில் இருதயதாஸ் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். உடனே, அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சுங்கான்கடையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் நேற்று (26-08-2019) அதிகாலையில் சிகிச்சை பலனின்றி இருதயதாஸ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவருடைய மனைவி மேரிசுசீலா இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...