திங்கள்நகர் அருகே வடக்கு நுள்ளிவிளையை சேர்ந்தவர் இருதயதாஸ் (வயது 59). இவருக்கு மனைவியும், 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர். இருதயதாஸ் ...
திங்கள்நகர் அருகே வடக்கு நுள்ளிவிளையை சேர்ந்தவர் இருதயதாஸ் (வயது 59). இவருக்கு மனைவியும், 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர்.

இருதயதாஸ் மாவட்ட தி.மு.க. தொண்டரணி துணை அமைப்பாளராக இருந்து வந்தார். மேலும், அந்த பகுதியில் டெய்லர் கடையும் நடத்தி வந்தார்.
சம்பவத்தன்று இருதயதாஸ் மோட்டார் சைக்கிளில் இரணியலுக்கு சென்று விட்டு, மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். பேயன்குழி பகுதியில் வந்தபோது, திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி அருகில் இருந்த வீட்டின் காம்பவுண்டு சுவரில் மோதியது. இதில் இருதயதாஸ் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். உடனே, அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சுங்கான்கடையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்று (26-08-2019) அதிகாலையில் சிகிச்சை பலனின்றி இருதயதாஸ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவருடைய மனைவி மேரிசுசீலா இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
No comments