Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Hover Effects

TRUE
Latest News:

Ads Place

மணவாளக்குறிச்சி பகுதியில் விஷம் குடித்து வக்கீல் தற்கொலை

மணவாளக்குறிச்சி அருகே வக்கீல் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மணவாளக்குறிச்சி அருகே சேரமங்கலம் கன்னிவி...

மணவாளக்குறிச்சி அருகே வக்கீல் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மணவாளக்குறிச்சி அருகே சேரமங்கலம் கன்னிவிளை பகுதியை சேர்ந்தவர் அனிஷ் (வயது 35). இவர் நாகர்கோவில் கோர்ட்டில் வக்கீலாக வேலை செய்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

தனது தாயுடன் வசித்து வந்தார். சுமார் 8 மாதங்களுக்கு முன் வயிற்றுவலி காரணமாக அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அறுவை சிகிச்சை செய்த புண் இன்னமும் ஆறவில்லை என கூறப்படுகிறது. இதனால் அனிஷ் மனம் உடைந்து காணப்பட்டாராம்.
நேற்று காலையில் மாடிக்கு சென்ற அனிஷ் நீண்ட நேரம் ஆகியும் கீழே இறங்கி வரவில்லை. அவருடைய தாய் சுலோச்சனா மாடிக்கு சென்று பார்த்த போது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. நீண்டநேரமாக தட்டியும் கதவு திறக்கப்படவில்லை.
அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஜன்னல் வழியாக ஒரு கம்பியின் உதவியால் உள்பக்கமாக போடப்பட்டு இருந்த கொண்டியை எடுத்தனர். கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது அங்கு வாயில் நுரை தள்ளிய நிலையில் அனிஷ் இறந்து கிடந்தார்.

அவரது உடலை பார்த்து தாய் சுலோச்சனா கதறி அழுதார். தகவல் அறிந்த மணவாளக்குறிச்சி போலீசார் விரைந்து வந்து அனிஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் மணவாளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வக்கீல் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர்.

No comments




வரலாற்று தகவல்கள்
அறிவியல் தகவல்கள்
ஆன்மிகம்
பொது அறிவு
மகளிர் ஸ்பெஷல்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு பிப...

மூணாறு விபத்தில் உயிரிழந்த மாணவ-மாணவிகளின் பெற்றோருக்கு நிதி...

மண்டைக்காடு பகவதியம்மன் திருக்கோவில் மாசிக்கொடை விழா மார்ச் ...

மணவாளக்குறிச்சி, பெரியவிளை பகுதியில் 2 வள்ளங்களில் மோட்டார் ...

புதிய கூட்டணியின் பெயர் ‘இந்தியா’ - சேர்ந்து போராடுவோம்: எதி...

மாதவலாயத்தில் கடை திறப்பு விழா பணியின் போது மின்சாரம் பாய்ந்...

மணவாளக்குறிச்சி அருகே உள்ள கடியப்பட்டணம் பகுதியை சேர்ந்த வால...

மணவாளக்குறிச்சி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பெண் போலீஸ...

மணவாளக்குறிச்சி பகுதியில் மின்சாரம் தாக்கி 10-ம் வகுப்பு மாண...

மணவாளக்குறிச்சி பேரூர் திமுக செயலாளராக ஐயப்பன் என்ற கண்ணன் ந...