மணவாளக்குறிச்சி அருகே உள்ள கீழமுட்டத்தை சேர்ந்தவர் பின்னராஜ் (வயது 28). அதே பகுதியை சேர்ந்தவர் நாயகம் மற்றும் பிள்ளைத்தோப்பை சேர்ந்தவர் நி...
மணவாளக்குறிச்சி அருகே உள்ள கீழமுட்டத்தை சேர்ந்தவர் பின்னராஜ் (வயது 28). அதே பகுதியை சேர்ந்தவர் நாயகம் மற்றும் பிள்ளைத்தோப்பை சேர்ந்தவர் நிகிலன் ஜோஸ் (வயது 24). இவர்கள் 3 பேரும் நண்பர்கள்.

நேற்று முன்தினம் 3 பேரும் பைக்கில் மணவாளக்குறிச்சி சந்திப்பு பகுதியில் வந்தனர். அப்போது எதிரே வந்த கார் மீதி பைக் மோதியது.
இதில் பைக்கில் பின்னால் இருந்த பின்னராஜ், நாயகம் ஆகியோர் கீழேவிழுந்து படுகாயம் அடைந்தனர். உடனடியாக அவர்களை மீட்டு மூங்கில்விளையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த விபத்து தொடர்பாக மணவாளக்குறிச்சி போலீசார் பைக்கை ஓட்டிய நிகிலன் ஜோஸ் மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments